தலைநகரை முடக்கிய கொரோனா.. 750 டாக்டர்களுக்கு பாதிப்பு.. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம்
டெல்லி: உலகம் முழுவதையும் ஆட்டிபடைத்து வரும் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவையும் ஆட்டிபடைத்து வருகிறது. ஓமிக்ரான் காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,50,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதியானது.
Recommended Video
தலைநகர் டெல்லியை ஓமிக்ரான் வைரசும், கொரோனாவும் சேர்ந்து போட்டு தாக்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20,181 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் பொதுமக்கள் மட்டுமில்லாமல் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் கொரோனா குறிவைத்து தாக்கி வருகிறது.

750 டாக்டர்களுக்கு கொரோனா
டெல்லியில் உள்ள 6 பெரிய மருத்துவமனைகளில் இருந்து 750 மருத்துவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் லேசான அறிகுறிகளை கொண்டுள்ளனர் என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டாக்டர்கள் பற்றாக்குறை
ஆனால் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவமனைகளில் நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் பற்றாக்குறை நிலை உள்ளது. இதேபோல் டெல்லி எய்ம்ஸ்(AIIMS) மருத்துவமனையிலும் கொரோனவால் பாதிக்கப்பட்ட 350 ரெசிடென்ட் டாக்டர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

'சமாளித்து வருகிறோம்'
இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டர் ஒருவர் கூறுகையில், ' எய்ம்ஸ் மருத்துவமனையில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தடை ஏதும் வந்து விடக்கூடாது என்பதற்காக இருக்கக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்களை வைத்து நிலைமையை சமாளித்து வருகிறோம்' என்று கூறினார்.

வெளிநோயாளிகள் பிரிவு மூடல்
கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எய்ம்ஸில் பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.டெல்லி அரசு மருத்துவமனையான லோக் நாயக்கில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக வெளிநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதேபோல் டெல்லியில் மத்திய அரசால் நடத்தப்படும் ஆர்எம்எல் மருத்துவமனையில், 90 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications