தலைநகரை முடக்கிய கொரோனா.. 750 டாக்டர்களுக்கு பாதிப்பு.. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம்
டெல்லி: உலகம் முழுவதையும் ஆட்டிபடைத்து வரும் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவையும் ஆட்டிபடைத்து வருகிறது. ஓமிக்ரான் காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,50,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதியானது.
Recommended Video
தலைநகர் டெல்லியை ஓமிக்ரான் வைரசும், கொரோனாவும் சேர்ந்து போட்டு தாக்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20,181 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் பொதுமக்கள் மட்டுமில்லாமல் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் கொரோனா குறிவைத்து தாக்கி வருகிறது.

750 டாக்டர்களுக்கு கொரோனா
டெல்லியில் உள்ள 6 பெரிய மருத்துவமனைகளில் இருந்து 750 மருத்துவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் லேசான அறிகுறிகளை கொண்டுள்ளனர் என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டாக்டர்கள் பற்றாக்குறை
ஆனால் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவமனைகளில் நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் பற்றாக்குறை நிலை உள்ளது. இதேபோல் டெல்லி எய்ம்ஸ்(AIIMS) மருத்துவமனையிலும் கொரோனவால் பாதிக்கப்பட்ட 350 ரெசிடென்ட் டாக்டர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

'சமாளித்து வருகிறோம்'
இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டர் ஒருவர் கூறுகையில், ' எய்ம்ஸ் மருத்துவமனையில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தடை ஏதும் வந்து விடக்கூடாது என்பதற்காக இருக்கக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்களை வைத்து நிலைமையை சமாளித்து வருகிறோம்' என்று கூறினார்.

வெளிநோயாளிகள் பிரிவு மூடல்
கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எய்ம்ஸில் பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.டெல்லி அரசு மருத்துவமனையான லோக் நாயக்கில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக வெளிநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதேபோல் டெல்லியில் மத்திய அரசால் நடத்தப்படும் ஆர்எம்எல் மருத்துவமனையில், 90 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்!












Click it and Unblock the Notifications