இந்தியா வந்த UAE அதிபர்.. டெல்லி விமான நிலையத்திற்கே சென்ற பிரதமர் மோடி! உற்று நோக்கும் உலகம்
டெல்லி: டெல்லிக்கு வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபரை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு சென்று, எனது சகோதரர் என்று அன்புடன் அவரை வரவேற்று இருக்கிறார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ஐக்கிய அரபு அமீரக அதிபரை, விமான நிலையத்தில் கட்டி தழுவி வரவேற்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இருவரும் ஒரே காரில் பயணம் செய்து தங்கள் நெருக்கமான நட்புறவை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த சந்திப்பு வெறும் 3 மணி நேரம் மட்டுமே நீடித்தாலும், தற்போதைய உலக அரசியல் சூழலில் இது மிக முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஈரான்-அமெரிக்கா இடையிலான விரிசல், காசா பகுதியில் நீடிக்கும் போர், மற்றும் ஏமன் மோதல், என மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. அமெரிக்க அதிபர், காசாவில் நிர்வாக குழுவை அமைப்பதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறார். இந்த சூழலில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீராக தலைவர்கள் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications