புயல்களை தீரமாக எதிர்கொண்டவர்களுக்கு சல்யூட்.. உறவினர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்.. பிரதமர் மோடி உரை
டெல்லி: இந்தியாவில் கொரோனாவிற்கு இடையே டவ் தே, யாஸ் போன்ற புயல்களும் தாக்கி உள்ளன, மக்கள் அதை துணிவாக எதிர்கொண்டனர் என்று பிரதமர் மோடி மன் கி பாத் உரையில் இன்று பேசினார்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து புயல் தாக்கியது. அரபிக்கடலை ஒட்டியுள்ள கேரளா, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை டவ் தே புயல் தாக்கியது. வங்க கடலில் உள்ள ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களை யாஸ் புயல் தாக்கியது.
இந்த நிலையில் இன்று மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி இந்த புயல் பாதிப்பு குறித்தும் மக்கள் அதை எதிர்கொண்ட விதம் குறித்தும் பேசினார்.

பேச்சு
பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், இந்தியாவில் கொரோனாவிற்கு இடையே டவ் தே, யாஸ் போன்ற புயல்களும் தாக்கி உள்ளன. பல மாநிலங்களில் புயல் மீட்பு பணிகள், நிவாரண முகாம்களில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டுக்கள். கொரோனாவிற்கு இடையிலும் மக்கள் தீரத்தோடு புயலை எதிர்கொண்டார்கள்.

புயல்
புயலை எதிர்கொண்டவர்களுக்கும், ஒற்றுமையாக இக்கட்டான காலத்தில் கரம் கோர்த்த எல்லோருக்கும் என்னுடைய சல்யூட். புயல் பாதிக்கப்பட்ட பல்வேறு மாநில மக்கள் மிகவும் துணிச்சலாக செயல்பட்டனர்.

போராட்ட குணம்
இந்திய மக்களின் போராட்ட குணத்தை உணர முடிந்தது. புயலில் உறவினர்களை இழந்தவர்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். அவர்களின் குடும்பங்களோடு நான் துணை நிற்கிறேன். உங்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

இரங்கல்
எனது தலைமையிலான அரசு இன்றுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 7 வருடம் மக்களின் தேவைகளை மனதில் வைத்து ஆட்சி நடத்தி இருக்கிறோம். எனது தலைமையிலான அரசு 'சப் கி சாத், சப் கி விகாஸ்' என்பதை மனதில் வைத்து செயல்பட்டோம். மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது, என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications