காசாவில் திரும்பும் இயல்புநிலை.. அமைதிக்கான முயற்சியை இந்தியா ஆதரிக்கும் - பிரதமர் மோடி
டெல்லி: காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட உள்ளது. இந்நிலையில் அமைதிக்கான முயற்சியை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், அமைதிக்காக டிரம்ப் எடுத்த முயற்சியையும், அவரது தலைமையையும் வரவேற்கிறோம் எனவும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
இது குறித்து தனது ட்வீட் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "காசாவில் அமைதி முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலைமையை நாங்கள் வரவேற்கிறோம். பணயக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கும்" என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக அமெரிக்கா முன்மொழிந்திருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்பதாக அறிவித்திருந்தது. அதன்படி, இஸ்ரேலிய கைதிகளை விடுவிப்பதாகவும் அறிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications