அத்தியாவசிய தேவையின்றி... வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் - பிரதமர் மோடி வேண்டுகோள்
டெல்லி: இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய போது பிரதமர் மோடி இதனைக் கூறினார்.
மேலும், எத்தகைய சவால்களையும் சந்திக்க முடியும் என்ற துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு பணிகளில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

தற்போது அமலில் உள்ள கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் சரியாக பின்பற்றினாலே முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தார். வீட்டில் உள்ள இளைஞர்களும், குழந்தைகளும் அவர்களது குடும்பத்தினரை அவசியத் தேவைகளின்றி வெளியில் செல்வதை தடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும், அறிவுரையும் அளிக்கும் வகையில் பிரதமர் மோடியின் உரை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தயாரிப்பு குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார் என்றவுடன் முழு ஊரடங்கு குறித்த அறிவிப்பு வரப்போவதாக தகவல் பரவிய நிலையில் அவரது உரை கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக மட்டுமே இருந்தது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications