ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பதில்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிகும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு ராஜ்யசபாவில் சற்று நேரத்தில் பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றி வருகிறார். லோக்சபாவில் இந்த விவாதங்களுக்கு நேற்று பதிலளித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது பிரதமர் மோடியை பேசவே விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கம் எழுப்பி இருந்தனர்.

18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24-ந் தேதி தொடங்கி ஜூலை 2-ந் தேதி வரை நடைபெற்றது. புதிய எம்பிக்கள் பதவி பிரமாணம், சபாநாயகர் தேர்தலைத் தொடர்ந்து ஜூன் 27-ல் லோக்சபா- ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

narendra modi rajya sabha

இதனைத் தொடர்ந்து இரு சபைகளிலும் ஜனாதிபதி உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. லோக்சபாவில் இந்த விவாதங்களுக்கு பிரதமர் மோடி நேற்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து லோக்சபா மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். பிரதமர் மோடி நேற்று பதிலுரையாற்றும் போது இடைவெளியே இல்லாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும் போது அரசுத் தரப்பில் 50 முறை குறுக்கீடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+