மன்னிப்பு கேட்காதீங்க.. நீங்கள் கொண்டாடப்பட வேண்டியவர்.. வருத்தப்பட்ட பூஜாவை.. தேற்றிய பிரதமர் மோடி
டெல்லி: காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டின் வெற்றி, கொண்டாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த போட்டியில் தான் தங்கம் வெல்ல நினைத்ததாகவும், ஆனால் வெண்கலம் மட்டுமே வென்றுள்ளதால் தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் பூஜா கண்ணீர் மல்க பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி "உங்களது வெற்றியை கொண்டாட வேண்டிய தருணம் இது. மன்னிப்பு கேட்கும் தருணம் அல்ல" என்று ஆறுதல் கூறியுள்ளார்.
22வது காமன்வெல்த் போட்டியானது இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற மகளிருக்கான 76 கி எடை பிரிவு ஃப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்தியா சார்பில் களம் இறங்கிய வீராங்கனை பூஜா ஆஸ்திரேலியாவின் நவோமி டி புரூனை வீழ்த்தி வெண்கல பத்தக்கத்தை வென்றார்.
இதன் மூலம் இந்தியாவின் மல்யுத்த பிரிவில் 6 வீராங்கனைகள் பதக்கங்களை வென்றுள்ளனர். அன்ஷு மாலிக் ,சாக்ஷி வெள்ளி பதக்கமும், வினேஷ் போகட் தங்க பதக்கமும், பூஜா கெலாட் மற்றும் திவ்யா கக்ரான் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தனர். இந்த வெற்றிக்கு பின்னர் பேட்டியளித்த பூஜா, "நான் வெண்கலம் வென்றதற்காக எனது நாட்டினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தங்கம் வென்று தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பி இருந்தேன்." என கண்ணீர் மல்க கூறினார். மேலும், "எனது தவறுகளிலிருந்து பாடம் கற்று அதை சரி செய்வேன்" என்று கூறினார்.
இந்நிலையில் "பூஜா, உங்களுடைய வெற்றி கொண்டாடப்பட வேண்டியது. வருத்தப்பட வேண்டியது அல்ல" என பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "பூஜா, உங்கள் பதக்கம் கொண்டாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறது. உங்கள் வாழ்க்கைப் பயணம் எங்களை ஊக்குவிக்கிறது. இந்த வெற்றி எங்களை மகிழ்விக்கிறது. நீங்கள் எதிர்காலத்தில் பெரிய விஷயங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்." என கூறியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், மகளிர் அணியினர் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் மகளிர் அணியினர் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். சொந்த நாட்டிலேயே அந்நாட்டு அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருப்பது பெரிய விஷயமாகும். இதனையடுத்து இந்திய மகளிர் அணிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications