இன்றே கடைசி.. ஜனாதிபதியாக விடைபெறும் ராம்நாத் கோவிந்த்.. மாலையில் நாட்டு மக்களுக்கு உரை!
டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவுக்கு வருகிறது. இதையடுத்து இன்று மாலையில் நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றுகிறார். இதைதொடர்ந்து நாட்டின் 15வது ஜனாதிபதியாக நாளை திரெளபதி முர்மு பதவியேற்க உள்ளார்.
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக இருப்பவர் ராம்நாத் கோவிந்த். இவர் கடந்த 2017 ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டார்.
2017 ல் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் 5 ஆண்டு கால பதவியை முற்றிலுமாக நிறைவு செய்துள்ளார்.

பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி
உத்தர பிரதேச மாநிலம் பாரனுக் கிராமத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த். சட்டம் படித்திருந்தார். வழக்கறிஞராக தனது வாழ்க்கையை துவங்கிய இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். 1994, 2000 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து மேல்சபை உறுப்பினராக செயல்பட்டார். தலித் வகுப்பை சேர்ந்த இவர் 2017ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து 2017 ஜூலை 25ல் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

5 ஆண்டு ஜனாதிபதியாக செயல்பாடு
இவர் தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் மத்திய அரசின் பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார். குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைக்கும் வகையிலான ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களை உருவாக்கும் மசோதா உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் வழங்கினார். அதோடு மூன்று வேளாண் சட்ட மசோதா ரத்துக்கும் ஒப்புதல் வழங்கினார்.இவர் தனது பதவிக்காலத்தில் 33 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார். செய்து நாட்டின் முதல் குடிமகனாக இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்து உலக அரங்கில் இந்தியாவின் உறவை வலிமைப்படுத்தினார்.

உரையுடன் விடைபெறும் ராம்நாத் கோவிந்த்
இந்நிலையில் தான் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்தின் 5 ஆண்டு பதவிக்காலம் இன்று நிறைவு பெறுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ராம்நாத் கோவிந்துக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதன்பிறகு நேற்று ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இதையடுத்து இன்று அவர் ஜனாதிபதியாக விடைபெறுகிறார். இதையொட்டி இன்று மாலை 7 மணிக்கு அவர் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

திரெளபதி முர்மு நாளை பதவியேற்பு
ராம்நாத் கோவிந்தை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் திரெளபதி முர்வு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின் 15 வது ஜனாதிபதியாக அவர் நாளை பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications