இன்றே கடைசி.. ஜனாதிபதியாக விடைபெறும் ராம்நாத் கோவிந்த்.. மாலையில் நாட்டு மக்களுக்கு உரை!
டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவுக்கு வருகிறது. இதையடுத்து இன்று மாலையில் நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றுகிறார். இதைதொடர்ந்து நாட்டின் 15வது ஜனாதிபதியாக நாளை திரெளபதி முர்மு பதவியேற்க உள்ளார்.
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக இருப்பவர் ராம்நாத் கோவிந்த். இவர் கடந்த 2017 ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டார்.
2017 ல் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் 5 ஆண்டு கால பதவியை முற்றிலுமாக நிறைவு செய்துள்ளார்.

பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி
உத்தர பிரதேச மாநிலம் பாரனுக் கிராமத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த். சட்டம் படித்திருந்தார். வழக்கறிஞராக தனது வாழ்க்கையை துவங்கிய இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். 1994, 2000 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து மேல்சபை உறுப்பினராக செயல்பட்டார். தலித் வகுப்பை சேர்ந்த இவர் 2017ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து 2017 ஜூலை 25ல் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

5 ஆண்டு ஜனாதிபதியாக செயல்பாடு
இவர் தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் மத்திய அரசின் பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார். குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைக்கும் வகையிலான ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களை உருவாக்கும் மசோதா உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் வழங்கினார். அதோடு மூன்று வேளாண் சட்ட மசோதா ரத்துக்கும் ஒப்புதல் வழங்கினார்.இவர் தனது பதவிக்காலத்தில் 33 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார். செய்து நாட்டின் முதல் குடிமகனாக இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்து உலக அரங்கில் இந்தியாவின் உறவை வலிமைப்படுத்தினார்.

உரையுடன் விடைபெறும் ராம்நாத் கோவிந்த்
இந்நிலையில் தான் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்தின் 5 ஆண்டு பதவிக்காலம் இன்று நிறைவு பெறுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ராம்நாத் கோவிந்துக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதன்பிறகு நேற்று ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இதையடுத்து இன்று அவர் ஜனாதிபதியாக விடைபெறுகிறார். இதையொட்டி இன்று மாலை 7 மணிக்கு அவர் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

திரெளபதி முர்மு நாளை பதவியேற்பு
ராம்நாத் கோவிந்தை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் திரெளபதி முர்வு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின் 15 வது ஜனாதிபதியாக அவர் நாளை பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications