41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணி.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.. முக்கிய தகவல்கள்
டெல்லி: 41 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் பணியை இன்று துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மின் துறையில் சுய சார்பு இந்தியா திட்டத்தை நிறைவேற்ற இது முக்கியமான நடவடிக்கை என்று தெரிவித்தார்.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் ( ஆத்மநிர்பார் பாரத்,) கீழ் 41 நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக துவக்கி வைத்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "எரிசக்தி துறையில் இந்தியாவை தன்னம்பிக்கை கொள்ள, இன்று ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாம் மாறுவோம்
இப்போது நாம் இறக்குமதி செய்யும் மின் தயாரிப்புகளில், எதிர்காலத்தில் முக்கிய ஏற்றுமதியாளர்களாக இருப்போம். உலகின் நான்காவது பெரிய நிலக்கரி உற்பத்தியாளராக இந்தியா இருப்பதால், நாம் ஏன், இந்த துறையில் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக மாற முடியாது.

20 ஆயிரம் கோடி முதலீடு
2030 க்குள் சுமார் 100 மில்லியன் டன் நிலக்கரியை எரிவாயுவாக்க இலக்கு வைத்துள்ளோம். இதற்காக 4 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வருவாய் கிடைக்கும்
2014 க்குப் பிறகு, நிலக்கரித்துறையில் நிலைமையை மாற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நிலக்கரித் துறை வலுப்பெற்றது: வணிக நிலக்கரி சுரங்கத்தில் தனியார் துறையை அனுமதிப்பது உலகின் நான்காவது பெரிய நிலக்கரி இருப்புக்களைக் கொண்ட நாட்டின் வளங்களைத் திறப்பதாகும். நிலக்கரி ஏல செயல்முறை மூலம் மாநிலங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இந்தியா வளர்ச்சி பெறும்
நிலக்கரித் துறை தொடர்பான இந்த சீர்திருத்தங்கள் நமது பழங்குடியினரையும் கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவையும் வளர்ச்சியின் தூண்களாக மாற்றுவதற்கான மிகப் பெரிய வழியாகும். இந்தியா கொரோனாவை எதிர்த்துப் போராடி அதற்கு எதிரான போரில் வெற்றி பெறும்; தொற்றுநோயை வென்று இந்தியாவை தன்னம்பிக்கை கொள்ளும்" இவ்வாறு கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications