பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடையா? தீவிரம் காட்டுகிறதா மத்திய அரசு? பரபர பின்னணி
டெல்லி: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை தடை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு சில நாட்களில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டும் நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய விபரம் வருமாறு:

ராமநவமி ஊர்வலத்தில் வன்முறை
இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு ராமநவமி கொண்டாட்டப்பட்டது. கோவா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது வன்முறைகள் வெடித்தன. குறிப்பாக மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் வன்முறையால் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது.

பாஜக குற்றச்சாட்டு
இந்நிலையில் தான் சில இடங்களில் நடந்த வன்முறைக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் பாஜகவினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் கார்கோனில் நடந்த தீவைப்பு, கல்வீச்சு சம்பவத்துக்கு பிஎப்ஐ சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டதாக அம்மாநில பாஜக தலைவர் விடி சர்மா குற்றம்சாட்டினார். இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் கராலியில் நடந்த பிரச்சனைக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா காரணம் என பாஜக இளைஞரணி தேசிய தலைவரும், எம்பியுமான தேஜஸ்வி சூர்யா குற்றம்சாட்டி உள்ளார்.

தடை குறித்து விரைவில் அறிவிப்பு
இந்நிலையில் தான் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்த அமைப்பை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய அரசு சார்பில் முடிவடைந்துவிட்டதாகவும், விரைவில் அறிவிப்பு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உளவுத்துறை, என்ஐஏ அறிக்கை
முதன் முதலாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்து உளவுத்துறை சார்பில் 2010ல் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சார்பிலும் பல அறிக்கைகள் மத்திய அரசியடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், ‛‛பயங்கரவாத அமைப்பாக கூறப்படும் மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) உடன் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளதாகவும், கோவா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், மணிப்பூர், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு கிளை அமைப்புகள் உள்ளது. கேரளாவில் எஸ்டிபிஐ எனும் கட்சி செயல்பட்டு வருகிறது'' என்பன போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

தீவிரமானது எப்போது
குறிப்பாக 2017ல் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் இருந்தே இந்த அமைப்பை இந்தியாவில் தடை செய்வது குறித்த செயல்பாடுகள் தீவிரமாக துவங்கியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செயல்பாடுகள் முடிவடைந்துள்ள நிலையில் ராமநவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையை கருத்தில் கொண்டு விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications