மக்களே ரெடியாக இருங்க.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை.. வரப்போகும் கூடுதல் கட்டுப்பாடுகள்?
டெல்லி: உலகம் முழுவதையும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 90 நாடுகளுக்கு மேல் பரவி அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தென் ஆபிரிக்க மருத்துவ நிபுணர்கள் இந்த உருமாறிய வைரஸ் ஆபத்தில்லை என்று கூறியபோதிலும் இது மிகவும் ஆபத்தானது. டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஓமிக்ரான் வைரஸ்
ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விடக்கூடாது என்பதில் இந்தியா மிகவும் கவனமாக இருந்த போதிலும் நமது நாட்டிலும் ஓமிக்ரான் புகுந்து விட்டது. இந்தியாவில் வேகமாக பரவும் ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது, டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் 57 பாதிப்புகளும், மகாராஷ்டிராவில் 54 பாதிப்புகளும் உள்ளன.

மாநிலம் வாரியாக பாதிப்புகள்
இது தவிர தெலுங்கானாவில் 24, கர்நாடகாவில் 19, ராஜஸ்தானில் 18, கேரளாவில் 15 மற்றும் குஜராத்தில் 14 ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகளும் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் மூன்று கேஸ்களும், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா இரண்டு கேஸ்களும் பதிவாகியுள்ளன. ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், லடாக், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒரு பாதிப்பு பதிவாகியுள்ளது.

பிரதமர் மோடி ஆலோசனை
இப்படி நாடு முழுவதும் ஓமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்க, ஓமிக்ரான் வைரஸ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மருத்துவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டில் இந்த வைரஸ் எந்த நிலையில் உள்ளது? மாநிலங்களில் இதனை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை செய்கிறார். ஓமிக்ரான் மேலும் பரவாமல் தடுக்க என்னென்ன கட்டுப்பாடுகளை விதிக்கலாம்? நாட்டில் இரவு நேர ஊரடங்கை கொண்டு வரலாமா? என்பதும் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எச்சரிக்கை மணி
தேவைப்பட்டால் மாநிலங்கள் இரவு ஊரடங்கு போட்டு கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்த நிலையில் இது தொடர்பாக வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஓமிக்ரான் தவிர, டெல்டா வைரஸ் மாறுபாடும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருவதாக மத்திய சுகாதாரர்த்துறை ஏற்கனவே எச்சரிக்கை மணி அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications