சீனா, சிங்கப்பூர் உட்பட 6 நாடுகளின் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்!
டெல்லி: சீனா, சிங்கப்பூர் உட்பட 6 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் சுற்றுலா பயணங்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவல் உலக நாடுகளில் அதிகரிக்க
தொடங்கி இருப்பதால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடுகிறது. சீனாவில் கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ளன.

சீனாவை தொடர்ந்து ஜப்பான், தாய்லாந்து, தைவான் என பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றன.
நமது இந்தியாவிலும் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை இன்று முதல் அமல்படுத்துகிறது. கொரோனா பரவல் அதிகம் உள்ள சீனா, ஹாங்ஹாங், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள், தங்களது பயணத்துக்கு 72 மணிநேரத்துக்கு முன்னதாக பெறப்பட்ட சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் தமக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்கிற உறுதிமொழியையும் அவர்கள் வழங்க வேண்டும். இந்த நடைமுறை அனைத்து விமான நிலையங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்கிற இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள், புறப்படுவதற்கு முன் கட்டாயமாக ஆர்டிபிசிஆர் சோதனைகளைச் செய்து, ஜனவரி 1, 2023 முதல் ஏர் சுவிதா போர்ட்டலில் அறிக்கையைப் பதிவேற்ற வேண்டும். 2023. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச விமானங்களிலும், பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் 2 சதவீத சீரற்ற சோதனைகளுக்கு கூடுதலாக இந்தச் சோதனை மேற்கொள்வது அவசியமாகிறது. உலகம் முழுவதும் குறிப்பாக மேற்கூறிய நாடுகளில் நிலவும் கொவிட்-19 சூழலைக் கருத்தில் கொண்டு இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications