உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு குறித்து உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டு எந்த அடிப்படையில் ஆண்டு வருமான வரம்பு ரூ8 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மண்டல் குழு பரிந்துரைகளின் படி 27% இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஓபிசிக்கான 27% இடஒதுக்கீடு
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதற்கு எதிராக தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டப் போராட்டம் நடத்தின. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட மத்திய அரசு இதனை அமல்படுத்தாமல் இருந்தது. இதற்கு எதிராக திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தது. இதன்பின்னரே மத்திய அரசு ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க முன்வந்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு, ஓபிசி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சந்திரசூட், விக்ரம்நாத், பிவி நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. கடந்த் 7-ந் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே, உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க ஆண்டு வருமான வரம்பு ரூ8 லட்சம் என்பது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன், மத்திய அரசின் கொள்கை முடிவு இது என்றார்.

மீண்டும் சரமாரி கேள்விகள்
இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போதும் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்தனர். அதாவது, உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு என்ன ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டது? எந்த ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்தது. மேலும் சினோ கமிட்டி அடிப்படையில்தான் உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு சொல்கிறது..அந்த சினோ கமிட்டி அறிக்கையை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லையே.. அதை ஏன் தாக்கல் செய்யவில்லை?

ஆண்டு வருமான வரம்பு குறித்து கேள்வி
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு வரம்பு ரூ8 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நியாயமானதுதான். அதே வருமான வரம்பு, உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு வழங்க எப்படி பொருந்தும்? உயர்ஜாதி ஏழைகள் 10% இடஒதுக்கீடு பெற ஆண்டு வருமான வரம்பு ரூ8 லட்சம் என்பதை எப்படி வரையறை செய்தீர்கள்? உயர்ஜாதி ஏழைகளின் சொத்துகளை கணக்கில் எடுக்காமல் வருமானத்தை மட்டும் எப்படி கணக்கில் எடுக்க முடியும்? ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கு கிரீமிலேயர் இருப்பது போல உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு கிரீமிலேயர் உள்ளதா? இத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் பிரமாண பத்திரத்தை வரும் 28-ந் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications