நிர்பயா வழக்கில் சீராய்வு மனு தள்ளுபடி.. அக்ஷய் குமாருக்கு தூக்கு உறுதி.. உச்சநீதிமன்றம் அதிரடி
Recommended Video
டெல்லி: நிர்பயா வழக்கில் அக்ஷய் குமாரின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார். இதையடுத்து அக்ஷய்குமாரின் தூக்கு தண்டனை குறித்து சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர் பானுமதி தலைமையிலான நீதிபதிகள் அசோக் பூஷன், ஏஎஸ் போபண்ணா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. அப்போது அக்ஷய்குமார் சிங் தரப்பில் ஏ பி சிங் ஆஜரானார்.

குற்றவாளிகள்
சிங் தனது வாதத்தில், அக்ஷய் குமார் ஒரு அப்பாவி, ஏழை. அவர் வேண்டுமென்றே குற்றவாளியாக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டவை. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பதால் குற்றவாளிகள்தான் இறப்பரே தவிர குற்றங்கள் ஒழிவதில்லை என சூடான விவாதத்தை முன்னெடுத்தார்.

மனு தள்ளுபடி
வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்றனர். அதன்படி நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை கைதி அக்ஷய்குமாரின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.

அக்ஷய்குமாருக்கு தூக்கு உறுதி
இதன் மூலம் அக்ஷய்குமாருக்கான தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த ஆண்டே மற்ற 3 பேரின் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தற்போது அக்ஷய் குமாரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் அக்ஷய்குமாருக்கு தூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது.

சீராய்வு மனு
நீதிபதிகள் கூறுகையில் கொடுத்த தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தோன்றவில்லை என்றனர். சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தனது தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க அக்ஷய்குமார் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications