நிர்பயா வழக்கில் சீராய்வு மனு தள்ளுபடி.. அக்ஷய் குமாருக்கு தூக்கு உறுதி.. உச்சநீதிமன்றம் அதிரடி
Recommended Video
டெல்லி: நிர்பயா வழக்கில் அக்ஷய் குமாரின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார். இதையடுத்து அக்ஷய்குமாரின் தூக்கு தண்டனை குறித்து சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர் பானுமதி தலைமையிலான நீதிபதிகள் அசோக் பூஷன், ஏஎஸ் போபண்ணா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. அப்போது அக்ஷய்குமார் சிங் தரப்பில் ஏ பி சிங் ஆஜரானார்.

குற்றவாளிகள்
சிங் தனது வாதத்தில், அக்ஷய் குமார் ஒரு அப்பாவி, ஏழை. அவர் வேண்டுமென்றே குற்றவாளியாக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டவை. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பதால் குற்றவாளிகள்தான் இறப்பரே தவிர குற்றங்கள் ஒழிவதில்லை என சூடான விவாதத்தை முன்னெடுத்தார்.

மனு தள்ளுபடி
வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்றனர். அதன்படி நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை கைதி அக்ஷய்குமாரின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.

அக்ஷய்குமாருக்கு தூக்கு உறுதி
இதன் மூலம் அக்ஷய்குமாருக்கான தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த ஆண்டே மற்ற 3 பேரின் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தற்போது அக்ஷய் குமாரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் அக்ஷய்குமாருக்கு தூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது.

சீராய்வு மனு
நீதிபதிகள் கூறுகையில் கொடுத்த தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தோன்றவில்லை என்றனர். சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தனது தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க அக்ஷய்குமார் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications