பா.ஜ.க. ஆதரவுடன் ஜனாதிபதி பதவியை நோக்கி சரத்பவார்.. மகாராஷ்டிரா சிவசேனா கூட்டணி அரசு நீடிக்குமா?
டெல்லி: பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் நாட்டின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முன்னிறுத்தப்படலாம் என்கின்றன டெல்லி தகவல்கள். இதனால் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் சூழ்நிலை உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இடையே முட்டல் மோதல் வெடிக்க தொடங்கிவிட்டது. இரு கட்சிகளும் பரஸ்பரம் கடுமையான விமர்சனங்களை முனவைத்து வருகின்றனர்.

அமித்ஷாவுடன் சந்திப்பா?
இந்த நிலையில்தான் அகமதாபாத் பண்ணை வீட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சரத்பவார் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. அத்துடன் இந்த சந்திப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்த முடியாது என்றார்.

அமித்ஷாவின் பூடகம்
அதாவது சரத்பவாரை தாம் சந்திக்கவே இல்லை என அமித்ஷா மறுக்கவில்லை. அதேநேரத்தில் பகிரங்கமாக எதனையும் சொல்ல முடியாது என பட்டும்படாமலும் பதில் அளித்திருக்கிறார். இந்த நிலையில் சரத்பவாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவசேனா குரல்
மகாராஷ்டிரா அரசியல் பஞ்சாயத்து மூத்த பத்திரிகையாளர்களிடம் நாம் பேசினோம். அப்போது, நாட்டின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக சரத்பவார் இருக்கிறார். சரத்பவாரை பொறுத்தவரையில் பாஜக ஒன்றும் பரம எதிரி எல்லாம் என்பதும் இல்லை. அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அனைத்து கட்சிகளும் சரத்பவாரை ஆதரிக்க வேண்டும் என அழுத்தமாக குரல் கொடுத்தது சிவசேனா.

பாஜக ஆதரவுடன்?
ஆனால் சரத்பவார் தரப்போ, பாஜகவின் ஆதரவுடனேயே ஜனாதிபதி ஆவதுதான் சரியாக இருக்கும்; எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் என களமிறங்குவதையும் அவர் விரும்பவில்லையாம். மேலும் தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு இந்த முறை ஜனாதிபதி பதவி கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் பாஜகவுக்கும் சரத்பவார் ஒரு தேர்வாக இருக்க வாய்ப்புள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

மகா. கூட்டணி அரசு எதிர்காலம்?
அப்படி ஒருவேளை பாஜகவுடன் சரத்பவார் கை கோர்க்கும் நிலை ஏற்பட்டால் மகாராஷ்டிராவில் கூட்டணி அரசு என்னவாகும் என்கிற கேள்வியும் எழுகிறது. அப்போது கூட்டணிகள் தலைகீழாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கும் எதுவும் இல்லை என்றும் அந்த பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏற்கனவே மூத்த காங்கிரஸ் தலைவரான குலாம்நபி ஆசாத்தை வளைத்துப் போட்டு அவரை துணை ஜனாதிபதி ஆக்கும் முயற்சிகளில் பாஜக முனைப்புடன் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications