மகிந்த ராஜபக்சேவுடன் சந்திப்பு.. தமிழில் ட்வீட் வெளியிட்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
டெல்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷே, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். தனது ஐந்து நாள் இந்திய பயணத்தின் முதல் நாளில் இந்த சந்திப்பு ராஷ்டிரபதி பவனில் நடந்தது.
இதுதொடர்பாக, தமிழில், ராம்நாத் கோவிந்த் டுவிட் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் வளர்ச்சி அதன் அயல்நாடுகளின் செழுமை மற்றும் அமைதியுடன் இணைந்திருப்பதாக நாம் உறுதியாக நம்புகிறோம். ஸ்திரமானதும் செழுமை நிறைந்ததுமான இலங்கையே இந்தியாவின் சிறந்த நலன். ஜனாதிபதி கோவிந்த் இலங்கையில் கடந்தவருடம் நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டித்ததுடன் இரு தலைவர்களும் பயங்கரவாதத்தை போராடித் தோற்கடிக்க உறுதி பூண்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியுடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார், அங்கு இரு தரப்பினரும் தீவிரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதோடு, இலங்கையில் கூட்டு பொருளாதார திட்டங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஒரு செய்திக்குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி, "இலங்கை அரசு, தங்கள் நாட்டில் வாழும் சிறுபான்மை தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்" அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி கோவிந்த் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ராஷ்திரபதி பவனில் சந்தித்தார். @PresRajapaksa pic.twitter.com/ZcX1YyM621
— President of India (@rashtrapatibhvn) February 8, 2020
பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை அடுத்தடுத்து, சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள, மகிந்த ராஜபக்ஷே, ஞாயிற்றுக்கிழமை உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசிக்கு புறப்படுவார், அங்கு காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சாரநாத் புத்த கோவிலுக்கு சென்று வழிபடுவார். அவரது வருகையையொட்டி, வாரணாசியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications