காலையிலேயே குலுங்கிய பூமி.. ஹரியானாவை தொடர்ந்து டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. மக்கள் பீதி
டெல்லி: டெல்லியில் சற்று நேரத்துக்கு முன்பு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.04 மணிக்கு டெல்லி என்சிஆர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியில் 4.4 என்ற அளவில் பதிவான நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் உணரப்பட்ட நிலையில் பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியும், ஹரியானாவும் பக்கத்தில் உள்ளன. இந்நிலையில் தான் இன்று காலையில் ஹரியானாவில் ஜஜ்ஜார் பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பறங்களில் உணரப்பட்டது.
டெல்லியில் இன்று காலை 9.04 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. சில நொடிகள் வரை பொதுமக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். கடைகள், வீடுகள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடு, கடைகளை விட்டு வெளியே வந்துவிட்டனர்.
இந்த நிலநடுக்கம் ஹரியானாவின் குர்கிராம், என்சிஆரின் பரிடாபாத், ஹிசார், ரோடாக், சோனிபேட், டெல்லியின் அருகே உள்ள உத்தர பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 4.4 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் சார்பில், ‛‛ஹரியானாவில் ஜஜ்ஜார் பகுதியில் காலை 9.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் ஹரியானாவில் ரோஹ்டாக் என்ற இடத்தில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications