கோவில்களுக்கு வரும் நன்கொடை பணத்தை எப்படி செலவு பண்றீங்க? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக கோவில்களுக்கு கிடைக்கும் நன்கொடை நிதி, உண்டியல் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களின் நிதியில் முறைகேடுகள் நடக்கிறது என்றும், பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட வில்லை என்றும் கோவில் நிதியை அறநிலையத்துறைக்கு மாற்றியதை திரும்ப வழங்க வேண்டும் என்றும் ஆலயம் காப்போம் என்ற அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

Temples Tamil nadu supreme court

அப்போது உச்சநீதிமன்றம், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு வரும் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது? உண்டியல் காணிக்கை, நன்கொடை நிதியை முறையாகச் செலவிட அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பியது.

மேலும், கோவில் நன்கொடை நிதியை கல்வி போன்ற சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்தினால் பிரச்சனை இல்லை, ஆனால் தேவையற்ற சொகுசு காரியங்களுக்காக கோவில் நிதியை அரசு பயன்படுத்தினால் தவறு எனத் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+