மாலேகான் குண்டுவெடிப்பு:மாஜி ராணுவ அதிகாரி வக்கீல் நீலா கோகலே நீதிபதியாக நியமனம்-கொலிஜியம் பரிந்துரை
டெல்லி: நாட்டை உலுக்கிய மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான முன்னாள் ராணுவ அதிகாரி லெப்.கர்னல் பிரசாந்த் ஶ்ரீகாந்த் புரோகித்தின் வழக்கறிஞர் நீலா கோகலே, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் இந்த பரிந்துரையை வழங்கி உள்ளது.
2008ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் இரட்டைக் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. மாலேகான் சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர். மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்துத்துவா தீவிரவாதிகளே மாலேகான் குண்டுவெடிப்புக்கு காரணம் என தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்தவர் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே. இந்த வழக்கில் இந்துத்துவா தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத் என்ற பயங்கரவாத இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்தவரும் கர்கரேதான். இதனையடுத்து பெண் சாமியார் சாத்வி பிரக்யா, முன்னாள் ராணுவ அதிகாரி புரோகித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஹேமந்த் கார்கரே வீர மரணம் அடைந்தார்.

தற்போது சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், பாஜகவின் எம்பியாக உள்ளார். முன்னாள் ராணுவ அதிகாரி புரோகித், ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் கடந்த வாரம், தம்மை விடுதலை செய்யக் கோரி புரோகித் தாக்கல் செய்த மனு, மும்பை உயர்நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தது. புரோகித்துக்காக இந்த வழக்கில் வாதாடி வந்தவர் வழக்கறிஞர் நீலா கோகலே.
இதனிடையே நீலா கோகலேவை மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பரிந்துரை செய்துள்ளது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் குழு. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொலிஜியம் குழு பரிந்துரைக்கும். இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என்பது நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications