5 மாநில தேர்தல்:போராட்டத்தை மேலும் வலுப்படுத்தி.. பா.ஜ.க.வுக்கு நெருக்கடி கொடுக்க விவசாயிகள் திட்டம்
டெல்லி: பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதே வேளையில் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் நடத்தும் போராட்டம் 8 மாதங்களை எட்டி விட்டது.
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.

5 மாநில தேர்தல்
விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக உள்ளது. அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் அங்கு மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்து பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ' விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன். நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு பலர் ஆதரவாக உள்ளனர். இருப்பினும், சில விவசாயிகளுக்கு சட்ட விதிகளில் ஏதேனும் பிரச்சினை உள்ளது, அவர்களுடன் கேட்கவும் விவாதிக்கவும் இந்திய அரசு தயாராக உள்ளது' என்று கூறியுள்ளார்.

டிராக்டர் பேரணி
இந்த நிலையில் ஜூலை மாதம் இரண்டு டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜூலை மாதம் 2 டிராக்டர் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜூலை மாதம் 9-ம் தேதி நடக்கும் டிராக்டர் பேரணியில் ஷாம்லி மற்றும் பக்பத் மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த பேரணி ஜூலை 10-ம் தேதி சிங்கு எல்லையை எட்டும்.

உறுதியாக இருக்கிறோம்
ஜூலை 24-ம் தேதி மற்றொரு டிராக்டர் பேரணி நடைபெறும். இதில் பிஜ்னோர் மற்றும் மீரட் மக்கள் கலந்து கொள்வார்கள். ஜூலை 25-ம் தேதி இந்த பேரணி டெல்லி-காசிப்பூர் எல்லையை சென்றடையும். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும். இதில் உறுதியாக இருக்கிறோம் என்று ராகேஷ் திகைத் கூறினார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications