5 மாநில தேர்தல்:போராட்டத்தை மேலும் வலுப்படுத்தி.. பா.ஜ.க.வுக்கு நெருக்கடி கொடுக்க விவசாயிகள் திட்டம்
டெல்லி: பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதே வேளையில் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் நடத்தும் போராட்டம் 8 மாதங்களை எட்டி விட்டது.
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.

5 மாநில தேர்தல்
விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக உள்ளது. அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் அங்கு மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்து பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ' விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன். நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு பலர் ஆதரவாக உள்ளனர். இருப்பினும், சில விவசாயிகளுக்கு சட்ட விதிகளில் ஏதேனும் பிரச்சினை உள்ளது, அவர்களுடன் கேட்கவும் விவாதிக்கவும் இந்திய அரசு தயாராக உள்ளது' என்று கூறியுள்ளார்.

டிராக்டர் பேரணி
இந்த நிலையில் ஜூலை மாதம் இரண்டு டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜூலை மாதம் 2 டிராக்டர் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜூலை மாதம் 9-ம் தேதி நடக்கும் டிராக்டர் பேரணியில் ஷாம்லி மற்றும் பக்பத் மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த பேரணி ஜூலை 10-ம் தேதி சிங்கு எல்லையை எட்டும்.

உறுதியாக இருக்கிறோம்
ஜூலை 24-ம் தேதி மற்றொரு டிராக்டர் பேரணி நடைபெறும். இதில் பிஜ்னோர் மற்றும் மீரட் மக்கள் கலந்து கொள்வார்கள். ஜூலை 25-ம் தேதி இந்த பேரணி டெல்லி-காசிப்பூர் எல்லையை சென்றடையும். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும். இதில் உறுதியாக இருக்கிறோம் என்று ராகேஷ் திகைத் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications