சீனாவிடம் இழந்த நிலம்... மீட்கப்படுமா... கடவுளின் செயல் என விடப்படுமா.... ராகுல் கேள்வி!!
டெல்லி: எல்லையில் நமது நிலத்தை சீனா அபகரித்துக் கொண்டுள்ளது. எப்போது இந்திய அரசு அவர்களிடம் இருந்து அந்த நிலத்தை மீட்கப் போகிறது. அல்லது அதுவும் கடவுளின் செயல் என்று விட்டு விடப் போகிறதா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய சீன எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் இருக்கும் சர்வதேச கட்டுப்பாட்டு கோட்டையும் தாண்டி இந்திய எல்லைக்குள் ஆக்கிரமிப்புகளை சீனா மேற்கொண்டு வருகிறது. கிழக்கு லடாக் பகுதியை குறிவைத்து சீனா காய்களை நகர்த்தி வருகிறது. ஏற்கனவே ஊடுருவலை மேற்கொண்டு இருக்கும் சீனாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டி காட்டி வருகிறார்.

சீன அதிபரிடம் ஏன் இந்தியப் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும் கேள்வி எழுப்பி வருகிறார். மேலும், மோசமாகி வரும் இந்தியப் பொருளாதாரம் குறித்தும் விமர்சனம் வைத்து வருகிறார். இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை இழப்பு பெரிய அளவில் ஏற்கனவே ஏற்பட்டு இருந்த நிலையில், தற்போது கொரோனா முடக்கத்திற்குப் பின்னர் இது அதிகரித்துள்ளது.
இதையும் தொடர்ந்து குறிப்பிட்டு வரும் ராகுல் காந்தி தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்பீக் அப் பார் வாய்ஸ் என்ற பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர். இந்த பிரச்சாரத்தில் மக்கள் அனைவரும் இணைந்து மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாஸ்கோவில் இந்தியா, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஐந்து அம்சத் திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படி, எல்லையில் தற்போது இணக்கமான சூழல் இல்லை. இருதரப்பு எல்லை படைகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். படைகளை வாபஸ் பெற வேண்டும். பதற்றத்தை தணிக்க வேண்டும். பதற்றத்தை அதிகரிக்கும் எந்த செயலிலும் இருதரப்பும் ஈடுபடக் கூடாது. இருதரப்பிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எல்லையில் இந்திய நிலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இவர் தனது ட்விட்டர் பதிவில், ''எல்லையில் நமது நிலத்தை சீனா அபகரித்துக் கொண்டுள்ளது. சீனாவிடம் இருந்து எப்போது இழந்த நிலத்தை இந்திய அரசு மீட்க இருக்கிறது. இல்லை அதுவும் கடவுளின் செயல்தான் என்று விட்டு விடுமா'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications