சீனாவிடம் இழந்த நிலம்... மீட்கப்படுமா... கடவுளின் செயல் என விடப்படுமா.... ராகுல் கேள்வி!!
டெல்லி: எல்லையில் நமது நிலத்தை சீனா அபகரித்துக் கொண்டுள்ளது. எப்போது இந்திய அரசு அவர்களிடம் இருந்து அந்த நிலத்தை மீட்கப் போகிறது. அல்லது அதுவும் கடவுளின் செயல் என்று விட்டு விடப் போகிறதா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய சீன எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் இருக்கும் சர்வதேச கட்டுப்பாட்டு கோட்டையும் தாண்டி இந்திய எல்லைக்குள் ஆக்கிரமிப்புகளை சீனா மேற்கொண்டு வருகிறது. கிழக்கு லடாக் பகுதியை குறிவைத்து சீனா காய்களை நகர்த்தி வருகிறது. ஏற்கனவே ஊடுருவலை மேற்கொண்டு இருக்கும் சீனாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டி காட்டி வருகிறார்.

சீன அதிபரிடம் ஏன் இந்தியப் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும் கேள்வி எழுப்பி வருகிறார். மேலும், மோசமாகி வரும் இந்தியப் பொருளாதாரம் குறித்தும் விமர்சனம் வைத்து வருகிறார். இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை இழப்பு பெரிய அளவில் ஏற்கனவே ஏற்பட்டு இருந்த நிலையில், தற்போது கொரோனா முடக்கத்திற்குப் பின்னர் இது அதிகரித்துள்ளது.
இதையும் தொடர்ந்து குறிப்பிட்டு வரும் ராகுல் காந்தி தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்பீக் அப் பார் வாய்ஸ் என்ற பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர். இந்த பிரச்சாரத்தில் மக்கள் அனைவரும் இணைந்து மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாஸ்கோவில் இந்தியா, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஐந்து அம்சத் திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படி, எல்லையில் தற்போது இணக்கமான சூழல் இல்லை. இருதரப்பு எல்லை படைகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். படைகளை வாபஸ் பெற வேண்டும். பதற்றத்தை தணிக்க வேண்டும். பதற்றத்தை அதிகரிக்கும் எந்த செயலிலும் இருதரப்பும் ஈடுபடக் கூடாது. இருதரப்பிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எல்லையில் இந்திய நிலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இவர் தனது ட்விட்டர் பதிவில், ''எல்லையில் நமது நிலத்தை சீனா அபகரித்துக் கொண்டுள்ளது. சீனாவிடம் இருந்து எப்போது இழந்த நிலத்தை இந்திய அரசு மீட்க இருக்கிறது. இல்லை அதுவும் கடவுளின் செயல்தான் என்று விட்டு விடுமா'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications