நாடு முழுக்க புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள், 15,700 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு.. அமைச்சரவை முடிவு
டெல்லி: நாட்டில் 75 புதிய மருத்துவ கல்லூரிகளை மத்திய அரசு துவங்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: நாட்டில் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை அரசு தொடங்கவுள்ளது. ரிசர்வ்ட் மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ .24,375 கோடி செலவில் கட்டப்படும், இதன் மூலம் நாட்டில் 15,700 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக சேரும். இது மருத்துவக் கல்வியின் மிகப்பெரிய விரிவாக்கம்.
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். 2019-20 ஆம் ஆண்டிற்கான 6 மில்லியன் டன்களுக்கான ஏற்றுமதி மானியத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சர்க்கரை ஆலைகளுக்கு 2019-20 மார்க்கெட்டிங் ஆண்டில் (அக்டோபர்-செப்டம்பர்) ஒரு டன்னுக்கு மொத்தம் 10,448 ரூபாய் ஏற்றுமதி மானியம் வழங்கப்படும், இதனால் அரசுக்கு கூடுதலாக, ரூ .6,268 கோடி செலவாகும்.
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு இந்த திட்டம் பயனளிக்கும்.
இவ்வாறு ஜவடேக்கர் தெரிவித்தார்.