மகள் பெயரில் மதுபான விடுதி.. காங்கிரஸ் குற்றச்சாட்டு.. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சவால்!
டெல்லி: கோவாவில் மகள் பெயரில் சட்டவிரோதமாக மதுபான விடுதி நடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய ஜவுளித்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி. இவரின் மகள் ஜோயிஷ் இரானி. இவர் கோவாவில் நடத்தி வரும் விடுதியின் மதுபான உரிமையைப் புதுப்பிக்க, இறந்தவரின் ஆவணத்தை சமர்ப்பித்துப் பெறப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்

காங்கிரஸ் குற்றச்சாட்டு
இது தொடர்பாகக் கோவாவின் கலால் ஆணையர் உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து கலால் துறையினரால் அனுப்பப்பட்ட நோட்டீஸின் நகலைப் பகிர்ந்து பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கெரா, கோவாவில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் ஒரே ஒரு மதுபான விடுதிக்குதான் உரிமம் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட இந்த உணவகத்தில் மட்டும் இரு மதுபான விடுதிக்கு உரிமம் இருக்கிறது.

காங். வலியுறுத்தல்
இதனால் இந்த விவாகரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு இளைய தலைமுறையினர் நலனைக் காக்க, சட்டவிரோத பார் நடத்தும் ஸ்மிருதி இரானியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

விளக்கம்
இதுகுறித்து ஸ்மிருதி இரானி தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. சம்மந்தப்பட்டவர் புகழ்பெற்ற அரசியல்வாதியின் மகள் என்பதால், பிரச்னையாக்கப்படுகிறது. கோவாவில் உள்ள சில்லி சோல்ஸ் விடுதிக்கு ஜோயிஷ் இரானி உரிமையாளர் இல்லை. போலியான, அவதூறான கருத்துகளை சமூக ஊடகங்களில் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் பேரில் பகிர்கின்றனர் என்று தெரிவித்தார்.

ஸ்மிருதி இரானி பேட்டி
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக உண்மையை பேசியதால் என் மகள் குறிவைக்கப்படுகிறாள். 2014 மற்றும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து நான் போட்டியிட்டது தான் என் செய்த தவறு. ஆனால் இன்னும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். 2024ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டால், அவர் தோல்வியடைவது உறுதி. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை எதிர்க்கட்சிகள் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications