கொரோனாவை சமாளிக்க இந்தியாவுக்கு விமானம் மூலம் அவசர கால உதவிகளை அனுப்பிய அமெரிக்கா
டெல்லி: இந்தியாவின் கோவிட் பாதிப்புகளை சமாளிக்க அமெரிக்கா விமானம் மூலம் அவசர உதவிகளை நேற்று அனுப்பியது.
ஏப்ரல் 26ஆம் தேதி உறுதி அளித்தபடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கோவிட் பெருந்தொற்று காரணமாக உயிர்களைக் காப்பாற்றவும், தொற்று பரவலைத் தடுக்கவும், இந்திய மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் USAID என்ற சர்வதேச வளர்ச்சிக்கான ஐக்கிய அமெரிக்க அமைப்பின் மூலமாக துரித நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

அதன்படி, நேற்று இந்தியாவுக்கான அவசர உதவிகள் முதல் தவணையாக அனுப்பி வைக்கப்பட்டன. கலிஃபோர்னியா மாநிலத்தின் நன்கொடையாக 440 ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெகுலேட்டர்கள் உள்ளிட்ட அவசர கால உதவிகள் உலகின் மிகப்பெரிய ராணுவ விமானத்தில், அமெரிக்காவின் டிராவிஸ் விமானப்படை தளத்தில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், நோய்த் தொற்றை முன்னதாகக் கண்டறிந்து, தடுக்க உதவும் 960,000 விரைவாக நோய் அறியும் பரிசோதனைக்குரிய கருவிகள், முங்களப்பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஒரு லட்சம் என்95 முகக்கவசங்கள் ஆகியவையும் அனுப்பப்பட்டுள்ளன.
இன்றைய அறிவிப்பு, யூ.எஸ்.ஏ.ஐ.டி. இந்தியாவில் பெருந்தொற்றுக்குத் தீர்வு காணும் முயற்சியின் அடிப்படையில் அமைந்துள்ளது. தொற்று ஆரம்ப காலம் முதல் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள உதவி சுமார் 23 மில்லியன் டாலர் ஆகும். மேலும், 320 ஆரம்ப சுகாதார மையங்களில் பயன்படுத்துவதற்காக ஆயிரம் மருத்துவ ஆக்சிஜன் செறிவுகளையும் (கான்சன்டிரேட்டர்) வாங்கி அனுப்ப உள்ளது.
யூ.எஸ்.ஏ.ஐ.டி. மூலமாக அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கி வரும் உதவிகள் உயிர்களைக் காக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும், பரிசோதனை மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தவும், பெரும் தொற்று சவாலை எதிர்கொள்ள புதுமையான வழிகளில் நிதி திரட்டவும் உதவியுள்ளது.
தாய் சேய் நலம், சிசு மரணம், போலியோ, ஹெச்.ஐ.வி., காசநோய் உள்ளிட்ட இந்தியாவின் பல உடல்நல சவால்கள் விஷயத்தில் யூ.எஸ்.ஏ.ஐ.டி இந்தியாவுடன் மிக நெருக்கமாக செயல்பட்டுள்ளது.
கடந்த 70 ஆண்டு காலமாக அமெரிக்கா இந்திய மக்களுக்கு தோளோடு தோளாய் நின்றுள்ளது. இப்போதைய கோவிட்-19 தொற்றையும் சேர்ந்து எதிர்கொள்ளும். தொற்றுநோய் ஆரம்ப காலகட்டத்தில் அமெரிக்க மருத்துவமனைகள் சிரமப்பட்டபோது
இந்தியா அமெரிக்காவிற்கு உதவி அனுப்பியது போலவே, இந்தியாவுக்கு உதவி தேவைப்படும் இந்த நேரத்தில் உதவ அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு நிவாரணப் பணிகளில் உதவ நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் சர்வதேச பேரிடர் தகவல் மையத்தின் இணைய தளத்தை (https://www.cidi.org) பார்க்கலாம்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications