‘லவ் குரு’ ஆன ஏஐ.. சாட் ஜிபிடிக்கு வந்த நிலைமை.. காதல் கடிதம் எழுத சொல்லி டார்ச்சர் பண்ண போறாங்களாம்
காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் பலரும் தங்கள் ஜோடிகளுக்கு தங்கள் அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்த சாட் ஜிபிடியை நாட தயாராகி இருக்கிறார்களாம்.
டெல்லி: உலகம் முழுவதும் நாளை (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. காதலர் தினத்தின் போது காதலர்கள் தங்கள் ஜோடிகளுக்கு புதுப் புது கிப்ட்களை கொடுத்து அசத்த திட்டமிட்டு வருகின்றனர். தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் புது வரவான சாட் ஜிபிடி பங்கு இல்லாமல் காதலர் தினம் கடந்து விடுமா என்ன? ஆம் காதலர்கள் பலரும் லவ் லெட்டர் எழுதவும் சாட் ஜிபிடியை நாட தயாராகி இருக்கிறார்களாம்.
காதலர்கள் ஆண்டு முழுவதும் உருகி உருகி காதலித்தாலும் அதை கொண்டாடுவதற்கான பிரத்யேகமாக ஒரு நாளும் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை (பிப்ரவரி 14) கொண்டாடப்படுகிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு தங்கள் காதலிகளுக்கு கிப்ட் கொடுத்து அசத்த இளைஞர்கள் பலரும் ஒரு வாரமாக பல பல திட்டங்களுடன் வலம் வருகிறர்கள். சும்மாவே காதலர்கள் தங்கள் ஜோடிகளை அசத்த கேட்டதை எல்லாம் வாங்கி கொடுப்பார்கள் அதுவும் காதலர் தினம் வந்து விட்டால் சொல்லவா வேணும்.

காதலி மீதான அன்பை வர்ணிக்க
டைரி மில்க் சாக்கலேட் தொடங்கி விலை உயர்ந்த ஆபரணங்கள் வரை அவரவர் வசதிக்கேற்ப பரிசுகளை கொடுத்து காதலர்கள் பலரும் தயாராகிக் கொண்டு இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் காதலர் தினம் குறித்த பதிவுகளும் நிரம்பி வழிகின்றன. பலரும் தங்கள் காதலிகளை வேலைண்டன்ஸ் டே கார்டு கொடுத்து வாழ்த்தவும், காதலி மீதான அன்பை வார்த்தைகளால் வர்ணிக்கவும் திட்டம் போட்டு ஒருவாரத்திற்கு முன்பிருந்தே பல கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி டைரியின் தாள்களை கிழித்து போடாத குறையாக மெனக்கெட்டு கொண்டு இருக்கிறார்கள்.

Chat GPT
ஒருபக்கம் இப்படி என்றால்,.. அட போங்க பாஸ்.. அதெல்லாம் 80, 90 கிட்ஸ்கள் காலம். இது எங்க 2 கே கிட்ஸ்கள் காலம் என்று சிம்பிளாக சொல்லிக்கொண்டு கவிதைகளையும் காதலியை வர்ணித்து எழுதவும் சாட் ஜிபிடியை நாட தயாராக உள்ளார்களாம். செயற்கை நுண்ணறிவு சாட்-பாட்டான Chat GPT அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வருவதும், நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் மிகவும் துல்லியமாகவும் விரைவாகவும் சாட் ஜிபிடி வழங்கி வருவது குறித்து நாம் அனைவரும் அறிந்ததுதான்.

''மாடர்ன் லவ்'' என்ற பெயரில்
இந்த சாட் ஜிபிடியைத்தான் காதலர்களும் தங்கள் ஜோடிகளை கவிதைகளால் வர்ணிப்பதற்கு பயன்படுத்த தயாராக இருக்கிறார்களாம். பிரபல ஆன்லைன் நிறுவனமான McAfee இது தொடர்பாக சர்வே நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த சர்வேயில்தான் இந்த சுவாரசிய தகவல் வந்துள்ளது. 9 நாடுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வை McAfee நடத்தியிருக்கிறது. ''மாடர்ன் லவ்'' என்ற பெயரில் நடத்தப்பட இந்த சர்வே முடிவுகளின் படி, கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 40 சதவீதம் பேருக்கு மனிதர்கள் எழுதிய காதல் கடிதத்திற்கும் இயந்திரம் எழுதிய கடிதத்திற்கும் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது
அந்த அளவிற்கு துல்லியமாக சாட் ஜிபிடி எழுதிய காதல் கடிதங்கள் ஒத்துப்போகியிருந்தனவாம். இதில் சுவாரசியமிக்க இன்னொரு தகவல் என்னவென்றால், 10 சதவீதம் பேர் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காதல் கடிதங்களை தீட்ட போவதாகவும் தங்கள் பார்ட்னர்களால் வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது என்றும் தெரிவித்து இருக்கின்றனர். சாட் ஜிபிடி மூலமாக எழுதினால் தவறுகள் இன்றி எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும் எனவும் பெரும்பாலானோர் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்த விரும்புவதற்கான காரணத்தையும் கூறியுள்ளனர்.

5 -ல் ஒரு பெண்கள் மட்டுமே
அதேவேளையில் இந்த சர்வேயில் கலந்து கொண்ட பெண்கள் பலரும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வேலைண்டன்ஸ் டே கார்டுகளை எழுத போவதில்லை என்று கூறியிருக்கின்றனர். 5 -ல் ஒரு பெண்கள் மட்டுமே ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்த விரும்புவதாக கூறியிருக்கின்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஆன்லைனில் பேக் ஐடிக்கள் உருவாக்கி வைத்திருக்கும் பலரும் ரொமாண்டிக் ஆக லெட்டர்கள் எழுத இந்த ஏஐ தொழில் நுட்பம் பெரிதும் உதவும் என்று McAfee எக்ஸ்பர்ட்ஸ் சொல்லியிருக்கின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications