மிக முக்கிய தருணம், கொரோனா வீரர்களுக்கு பொருத்தமான அஞ்சலி... தடுப்பூசி ஒப்புதல் குறித்த ஹர்ஷ் வர்தன்
டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது நமது கொரோனா வீரர்களுக்கு பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் என்று அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இன்று சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்தின் அவசரக்கால பயன்பாட்டிற்குத் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மிக முக்கிய தருணம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போரில் இது மிக முக்கிய தருணம். சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்துகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பு மருந்திற்கான நமது காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த தடுப்பு மருந்துகள் நமது கொரோனா வீரர்களுக்குப் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும். யாரும் எதிர்பாராத இதுபோன்ற காலங்களில் முன்மாதிரியான பணிகளை மேற்கொண்ட சுகாதார வல்லுநர்களுக்கும் முன்கள ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் அயராத முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.
தடுப்பு மருந்தை விரைவாகவும் தேவைக்கு ஏற்ற வகையிலும் விநியோகிக்க நாம் உருவாக்கிய வைத்துள்ள வலுவான விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பின் பலன்களைப் பெறுவதற்கான நேரம் இது" என்று பதிவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications