மிக முக்கிய தருணம், கொரோனா வீரர்களுக்கு பொருத்தமான அஞ்சலி... தடுப்பூசி ஒப்புதல் குறித்த ஹர்ஷ் வர்தன்
டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது நமது கொரோனா வீரர்களுக்கு பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் என்று அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இன்று சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்தின் அவசரக்கால பயன்பாட்டிற்குத் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மிக முக்கிய தருணம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போரில் இது மிக முக்கிய தருணம். சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்துகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பு மருந்திற்கான நமது காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த தடுப்பு மருந்துகள் நமது கொரோனா வீரர்களுக்குப் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும். யாரும் எதிர்பாராத இதுபோன்ற காலங்களில் முன்மாதிரியான பணிகளை மேற்கொண்ட சுகாதார வல்லுநர்களுக்கும் முன்கள ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் அயராத முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.
தடுப்பு மருந்தை விரைவாகவும் தேவைக்கு ஏற்ற வகையிலும் விநியோகிக்க நாம் உருவாக்கிய வைத்துள்ள வலுவான விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பின் பலன்களைப் பெறுவதற்கான நேரம் இது" என்று பதிவிட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications