இந்திய ராணுவத்திற்கு ஏகே 203 ரக துப்பாக்கிகள் வலுசேர்க்குமா?.. சிறப்பம்சங்கள் என்ன?
டெல்லி: இந்தியா- ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாகவுள்ள ஏகே 203 ரக துப்பாக்கிகள் இந்தியாவிற்கு வலுசேர்க்குமா என்பதை பார்ப்போம்.
Recommended Video
இந்தியா- ரஷ்யா இடையேயான பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பின் போது 6 லட்சம் எண்ணிக்கையிலான ஏகே 203 ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்து ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. அதற்காக 5100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள தொழிற்சாலையில் இந்தியா- ரஷ்யா கூட்டு தயாரிப்பில் ஏகே 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படவுள்ளன.
இந்த துப்பாக்கிகளை இயக்குவது குறித்த செயல்விளக்கத்தையும் ரஷ்ய அதிகாரிகள் விளக்குவர். இந்திய ராணுவத்தால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் இன்சாஸ் வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதிக எடை
இந்த துப்பாக்கிகள் அதிக எடை கொண்டதாக இருப்பதாகவும் தோட்டாக்கள் சிறிய அளவிலாக இருப்பதாக எதிரிகளை துல்லியமாக சுட முடியவில்லை என்றும் , அப்படியே தோட்டா பாய்ந்தாலும் எதிரிக்கு காயம் மட்டுமே ஏற்படுவதாகவும் இந்திய ராணுவம் கவலை தெரிவித்து வந்தது.

கார்கில் போர்
இந்த துப்பாக்கிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வந்தது. கார்கில் போரின் போதும் இந்த ரக துப்பாக்கிகள்தான் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு போருக்கான தேவை இல்லாததால் இந்த துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை. இவை 2017ஆம் ஆண்டுக்கு பிறது பழுதடைய தொடங்கிவிட்டன.

உறைபனி காலம்
உறைபனி காலங்களில் பனி கட்டியாகிவிடுவதால் எதிரிகளை வீழ்த்த இவற்றை பயன்படுத்த முடியாமல் ராணுவ வீரர்கள் தவித்தனர். இதனால்தான் இந்த துப்பாக்கிகளுக்கு மாற்றாக தீவிரவாத தாக்குதல்களை சமாளிப்பதற்காக ஏகே 203 ரக துப்பாக்கிகளை வாங்க இந்தியா முடிவு செய்தது. இந்தியாவுக்கு 6.70 லட்சம் துப்பாக்கிகள் தேவைப்படுகிறது.

6 லட்சம்
இதில் 70 ஆயிரம் துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்து கொண்டு மீதமுள்ள 6 லட்சம் துப்பாக்கிகளை அமேதியில் தயார் செய்து கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. ஏகே 203 ரக துப்பாக்கிகள் துல்லியமாகவும் எடை குறைவாகவும் அதே நேரத்தில் இலக்கை சரியாக தாக்கும் திறனும் கொண்டது.

ஏகே 203 எடை
இன்சாஸ் துப்பாக்கியின் எடை 4.15 கிலோ இருக்கிறது. ஆனால் ஏகே 203 இன் எடை 3.8 கிலோவாகும். இன்சாஸ் துப்பாக்கியின் குறி வைக்கும் தொலைவு 400 மீட்டர் மட்டுமே. ஆனால் ஏகே 203 துப்பாக்கியானது 400 முதல் 800 மீட்டர் வரை குறி வைத்து தாக்க முடியும். இந்த துப்பாக்கியிலிருந்து 700 குண்டுகளை வெளியேற்றலாம். அத்தனையும் வாயு நிரப்பப்பட்டவையாகும்.

நீளம் என்ன
இன்சாஸ் துப்பாக்கியின் நீளம் 960 மி.மீ. ஆகும். ஆனால் ஏகே 203 ரக துப்பாக்கியின் நீளம் 705 மி.மீ. ஆகும். இந்த துப்பாக்கியின் முழு தயாரிப்பு பணிகளை ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரீஸ் போர்டு மற்றும் ரஷ்யாவின் ரோசோபோரான்எக்ஸ்பர்ட் மற்றும் கலாஷ்னிகோவ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்படும். எனவே இந்த நவீன ரக துப்பாக்கிகள் இந்தியாவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
-
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications