கொக்கு மூக்கு மாஸ்க்கைத் திறந்தா.. தேன், வைப்பர் பவுடர், லவங்கம்.. அடேங்கப்பா.. அந்தக் காலமாச்சே!
டெல்லி: புபோனிக் பிளேக் நோய் கொக்கு மூக்கு மாஸ்க் மூலம் 17ஆம் ஆண்டு காலத்து டாக்டர்கள் நோய் பரவலை எப்படி தடுத்தார்கள் என்ற தகவல்களை பார்ப்போம். எத்தனை மெனகெடல்களை செய்து நோயை பரப்பியுள்ளார்கள் என்பதை பார்க்கும் போது ஓல்டு இஸ் கோல்டு என்பதை மறுப்பதற்கில்லை.
கொரோனா எனும் தொற்றுநோயிலிருந்து தங்களை பாதுகாக்க மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க்குகள், கிளவுஸ் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்தினார்கள்.
ஆனால் அந்த காலத்தில் அதாவது 1347-ஆம் ஆண்டு மனித வரலாற்றில் மிகவும் மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இந்த நோயிலிருந்து அந்த காலத்து மருத்துவர்கள் தங்களை காக்க எந்த மாதிரியான கவசங்களை பயன்படுத்தினர் என்பதை பார்ப்போம்.

வைத்தியம்
தொற்றுநோய்களுக்கு வைத்தியம் பார்க்கும் போது அவர்களிடம் இருந்து மூச்சுக் காற்று மூலம் பிளேக் நோய் பரவலை தடுக்க மெழுகினால் ஆன நீண்ட அங்கி, கையில் லெதர் கிளவுஸ், காலில் லெதர் பூட்ஸ், முகத்தில் பறவையின் அலகு போன்ற ஒன்றை மாஸ்க் போல் அணிந்திருந்தார்கள். இந்த கொக்கு மூக்கு மாஸ்க் எப்படி நோயிலிருந்து காத்தது தெரியுமா.

சென்ட்கள்
பொதுவாக வாசனை திரவியங்கள், சென்ட்கள், ஊதுவத்திகள் மூலம் கிருமிகள் கொண்ட காற்று நுழைவதை தடுக்க இந்த கொக்கு மூக்கு மாஸ்க்கள் அணியப்பட்டன. இந்த நீண்ட மூக்கு மாஸ்க்கில் ஒரு கலவையை அவர்கள் பயன்படுத்தினார்கள். அதாவது வைப்பர் பவுடர், தேன், இலவங்கப்பட்டை, பாம்பு விஷ முறிவு உள்ளிட்ட 55 மூலிகைகள் கொண்டிருக்கும்.

வடிகட்டும் தன்மை
இந்த மூலிகை கலவை கெட்ட காற்றை வடிகட்டும் தன்மை கொண்டதால் அது போன்ற பெரிய மூக்கை மாஸ்க்காக பயன்படுத்தினர். இந்த மூலிகைகள் மூலம் கெட்ட காற்று சுத்தப்படுத்தப்பட்டு மூக்கு, நுரையீரல் பாதிப்பை தடுக்கும். இது 17ஆவது நூற்றாண்டில் சார்லஸ் டீ லோர்ம் என்ற மருத்துவர் கண்டறிந்தார்.
Recommended Video

காரணம் என்ன
பிளேக் நோய் ஏற்படுவது எப்படி என்பது குறித்து காரணம் கிட்டதட்ட 3 மிகப் பெரிய தொற்றுநோய்களுக்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது பிளேக் நோய்கள் கெட்ட காற்றால் பரவாது என கண்டுபிடிக்கப்பட்டது. இவை யெர்சீனியா பெஸ்டிஸ் என்ற ஒரு வகை பாக்டீரியாவாலும் ஒரு வகை ஈக்களாலும் பரவுகிறது. இந்த பிளேக் கெட்டு போன திரவம், திசுக்கள், நிமோனிக் பிளேக் கொண்ட மக்கள் இருமும்போதும் தும்மும் போதும் வெளியாகும் நீர் துளிகளிலிலிருந்தும் பரவுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications