மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் பேச்சுவார்த்தை- மல்யுத்த வீரர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க கோரும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடனான பேச்சுவார்த்தைக்குப் பின் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் அத்துமீறல் புகார் செய்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடியவர் என்ற காரணத்தால் பிரிஜ் பூஷண் மீது மத்திய அரசு கைவைக்கவில்லை. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்கும் போனது. உச்சநீதிமன்றம் கடுமை காட்டிய பின் வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டது. ஆனால் பிரிஜ் பூஷண் கைது செய்யப்படவில்லை.

ஏற்கனவே டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாத கால போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர் வீராங்கனைகள், புதிய நாடாளுமன்றத்தை திறப்பு விழாவின் போது முற்றுகையிட்டு போராட சென்றனர். அப்போது அவர்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்துவிட நாடு கொந்தளித்தது.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென, மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று இன்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அனுராக் தாக்கூரை சந்தித்து பேசினர். மல்யுத்த வீரர்கள் சார்பாக பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல மணிநேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, போலீஸ் நடத்தி வரும் விசாரணை ஜூன் 15-ந் தேதிக்குள் முடிவடையும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒப்புக் கொண்டுள்ளார். எங்களுக்கு வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் ஜூன் 15-க்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் நாங்கள் போராட்டத்தை தொடருவோம் என்றார். மேலும் நீதிக்கான எங்கள் போராட்டம் முடியவில்லை என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications