அமித் ஷா உடன் நடந்த முக்கிய சந்திப்பு.. விவாதிக்கப்பட்டது என்ன? உண்மையை போட்டுடைத்த எடியூரப்பா
டெல்லி: உள் துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பின் போது ராஜினாமா குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் கட்நாடக சட்டசபை தேர்தல் குறித்தும் 2024இல் நடைபெறும் மக்களவை தேர்தல் குறித்தும் ஆலோசித்ததாகக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா விளக்கமளித்துள்ளார்.
Recommended Video
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக சில மூத்த அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அரசு நிர்வாகத்தில் எடியூரப்பாவின் மகன் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் டெல்லியில் டென்ற எடியூரப்பா பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அமித் ஷா சந்திப்பு
எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அது பற்றியே அமித் ஷா உடன் விவாதித்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சராகக் கூடுதலாகப் பொறுப்பேற்றுள்ள அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் அடுத்து நடைபெறும் மக்களவை தேர்தல், கர்நாடக மற்றும் உபி சட்டசபைத் தேர்தல் ஆகியவை குறித்தும் விவாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், "கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை அமைக்கக் கடுமையாக உழைக்கும்படி அமித் ஷா கேட்டுக் கொண்டார். அதேபோல மக்களவை தேர்தலிலும் அதிகப்படியான இடங்களில் வெல்ல வேண்டும் என்றும் சொன்னார். பாஜகவுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் பாஜக நிச்சயம் 100% வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அமித் ஷா என்னிடம் சொன்னார்" என்று அவர் கூறினார்.

வலுப்படுத்த வேண்டும்
மேலும் கர்நாடகாவில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்றும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அமித் ஷா தன்னை கேட்டுக் கொண்டதாக எடியூரப்பா தெரிவித்தார். கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், எடியூரப்பா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா
ராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான தகவல் குறித்துப் பேசிய எடியூரப்பா, "இது முற்றிலும் பொய்யான ஒரு தகவல். இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. சில அமைச்சர்கள் கிளப்பிவிட்டிருக்கும் இதுபோன்ற வதந்திகளுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. கட்சித் தலைமை எப்போது என்னை ராஜினாமா செய்யச் சொல்கிறதோ, அப்போது நான் ராஜினாமா செய்வேன்" என் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications