திண்டுக்கல் மாவட்டத்திற்கு மேலும் ஒரு அரசு கல்லூரி.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு கலைக் கல்லூரியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகள் அளித்திருந்தார். தொகுதியில் அரசு கல்லூரி, பரப்பலாறு அணை தூர்வாருவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகின.

சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அத்துறையின் அமைச்சர் பிகே சேகர்பாபு கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார். ஏற்கெனவே தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 150 கோடி ரூபாய் செலவில் புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில், முதல்கட்டமாக 4 கல்லூரிகளுக்கு உயர் கல்வித் துறையிடம் அனுமதி பெற்று இந்த ஆண்டு கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. அதன்படி சென்னை, கொளத்தூரில் 'கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி', நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் 'அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி', திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 'பழனியாண்டவர் மகளிர் கல்லூரி' மற்றும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 'சுப்ரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி' ஆகிய 4 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

மேலும், தனியார் கட்டிடத்தில் அனுமதி பெற்று வாடகையில் இந்த கல்லூரிகளில் நடத்த உள்ளதாகவும், இந்த கல்லூரிகளில் பி.காம், பிசிஏ. , பி பி ஏ., பிஎஸ்சி., கணினி அறிவியல் ஆகிய நான்கு இடம்பெறவுள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் , ஒட்டன்சத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், உயர்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், இங்கு கல்லூரி அமைந்துள்ளதன் மூலம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் அதிகம் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications