சொந்த கட்சினு கூட பார்க்கல.. மஜக பொதுச்செயலாளர் பதவியில் தமிமுன் அன்சாரி அதிரடி நீக்கம்!என்னாச்சு?
மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து தமிமுன் அன்சாரி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியை துவக்கினார்.
திண்டுக்கல்: மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். திண்டுக்கல்லில் நடந்த அக்கட்சியின் மாநில பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பின்னணி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியில் தமிமுன் அன்சாரி செயல்பட்டு வந்தார். கடந்த 2016ல் மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து தமிமுன் அன்சாரி தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சியை தொடங்கினார்.
அதன்படி உருவானது தான் மனிதநேய ஜனநாயக கட்சி. இந்த கட்சியின் பொதுச்செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டு வந்தார்.

பொதுச்செயலாளர் பதவியில் நீக்கம்
இந்நிலையில் தான் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். திண்டுக்கல்லில் நடந்த அக்கட்சியின் மாநில பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்?
மேலும் இதன் பின்னணியில் உள்ள தகவல்களும் வெளியாகி உள்ளன. கட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும் நோக்கத்தின் தன்னிச்சையாக அவர் நடந்து கொண்டதாக பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் தான் 6 மாத காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளார் தமிமுன் அன்சாரி. புதிய பொதுச்செயலாளராக ஹாருன் ரஷீத் என்பவர் நியமித்துள்ளது மனிதநேய ஜனநாயக கட்சி.

2016ல் புதிய கட்சி
முன்னதாக ஜவாஹிருல்லா தலைமையில் இயங்கும் மனிதநேய மக்கள் கட்சியில் முக்கிய பதவியில் தமிமுன் அன்சாரி இருந்தார். அப்போது அவர் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். கட்சி தனிஅணியாக செயல்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கமும் செய்யப்பட்டார். அதன்பிறகு தமிமுன் அன்சாரி 2016ல் மனிதநேய ஜனநாயக கட்சியை துவங்கினார்.

எம்எல்ஏவாக்கிய ஜெயலலிதா
மேலும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவரது கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி தமிமுன் அன்சாரியை எம்எல்ஏ ஆக்கினார். இந்நிலையில் தான் தமிமுன் அன்சாரியே தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டு 6 மாத காலத்துக்கு நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது மனிதநேய ஜனநாய கட்சியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications