'தம்பி வா தலைமை ஏற்க வா'.. ஸ்டாலின் விஜய்யை அழைப்பது போல் போஸ்டர்.. திகைக்க வைத்த ரசிகர்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் விஜய் இருக்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் ஏழை எளிய மக்களுக்கு நல்லாட்சியை வழங்கிட 'தம்பி வா தலைமை ஏற்க வா' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
நடிகர் விஜய்யின் பிறந்த வரும் ஜூன் 22ம் தேதியாகும். இவரது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் வித்தியாசமாக போஸ்டர்களை ஒட்டுவது வழக்கம்.
அப்படி திண்டுக்கல் மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் திமுகவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தம்பி வா தலைமை ஏற்கவா என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பது போலவும், தனது கையில் உள்ள செங்கோலை விஜய்யிடம் ஸ்டாலின் தருவது போலவும் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

தவறுகளை விமர்சிப்பார்
நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கிறது என்றாலும் எந்த கட்சியிலும் அவர் இதுவரை சேர்ந்தது இல்லை. ஆடியோ ரிலீஸ் அன்று மட்டுமே மக்கள் முன்பு தோன்றும் விஜய், நிர்வாக ரீதியாக தவறுகள் இருந்தால் விமர்சனம் செய்வார். அந்த வகையில், அதிமுக ஆட்சியை நிர்வாக ரீதியாக இரண்டு முறை விமர்சனம் செய்துள்ளார்.

சேரவில்லை விஜய்
நடிகர் விஜய்க்கும் அரசியலுக்குமான தொடர்புமான கடந்த சில வருடங்களாக அதிகம் பார்க்கப்படுகிறது. விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அதன்பிறகு அவர் எந்த முறைகேடும் செய்யவில்லை என்று அப்போது கூறப்பட்டது. அதன்பிறகு விஜய் பாஜகவுடன் நெருக்கமாவாரா என்ற பரபரப்பு எழுந்தது. ஆனால் அவர் பாஜக உடன் சேரவில்லை.

விஜய் மறுப்பு
அதேநேரம் சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் திடீரென விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்தார். அப்போது வெளிப்படையாக அதனை எதிர்த்த விஜய், தனது தந்தைக்கு தனக்கும் அரசியல் ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. தனது தந்தையின் அரசியல் கட்சிக்கு பின்னணியில் தான் இல்லை என்றும் மறுத்தார். அத்துடன் தன் மக்கள் இயக்கத்தினரை அதில் சேர வேண்டாம் என்றும் உத்தரவிட்டார். இதனால் கடைசி வரை எஸ்ஏ சந்திரசேகரின் கட்சி செயல்படாமல் முடங்கியது. கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தையும் எஸ்ஏசி முட்டைக்கட்டிவைத்தார்.

விஜய் போஸ்டர்
விஜய் தனக்கு அரசியலில் தற்போது இறங்கும் எண்ணம் இல்லை என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்றாலும், அவரது அரசியல் குறித்து அவ்வப்போது கேள்விகள் எழுந்து வருகின்றன. சட்டசபை தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அமைதியாக கடந்தார். தற்போது தேர்தல் முடிந்து திமுக ஆட்சி பிறந்துள்ள நிலையில், திண்டுக்கல்லில் விஜய் ரசிகர்கள் ஒட்டியள்ள போஸ்டர் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் ஏழை எளிய மக்களுக்கு நல்லாட்சியை வழங்கிட 'தம்பி வா தலைமை ஏற்க வா' என்று உள்ளது. விளையாட்டாக விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை ஒட்டினார்களா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை.
-
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.!












Click it and Unblock the Notifications