Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொகுதிகளை மாற்றிப் போட்ட தலைமை.. ‘அதிரடி கணக்கு’.. இப்படி ஆகிப்போச்சே.. புலம்பும் மா.செ ஆதரவாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

தென்காசி : தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக சீரமைக்கப்படுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தென்காசி வடக்கு மாவட்டத்தில் இருந்த கடையநல்லூர் தொகுதியை தெற்கிலும், மற்றும் தெற்கு மாவட்டத்தில் இருந்த சங்கரன்கோவில் தொகுதியை வடக்கு மாவட்டத்திலும் சேர்த்து திமுக தலைமை அறிவித்துள்ளது.

சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜாவை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக நியமிப்பதற்காகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதனால், மாவட்ட செயலாளர் பதவிக்கான போட்டியில் இருந்த சிட்டிங் மா.செ செல்லதுரை மற்றும் எம்.பி தனுஷ் குமார் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

71 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள்

71 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள்

திமுகவின் 72 கழக மாவட்டங்களில் தென்காசி வடக்கு தவிர்த்து 71 மாவட்டங்களுக்கான மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் திமுக தலைமைக் கழகத்தால் கடந்த மாதமே வெளியிடப்பட்டது. வாசுதேவநல்லூர், கடையநல்லூர் தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மட்டும் இன்னும் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை. தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் செல்லதுரைக்கு பதிலாக, திமுக எம்.பியான தனுஷ் குமாருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பதவி தர உள்ளதாக தகவல் பரவியதால், செல்லத்துரை ஆதரவாளர்கள் சென்னை அறிவாலயத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிறுத்தி வைப்பு

நிறுத்தி வைப்பு

இதற்கிடையே தென்காசி வடக்கு மாவட்ட துணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஜய அமுதா என்பவர் திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் தென்காசி வடக்கு நிர்வாகிகள் அறிவிப்பை நிறுத்தி வைத்தது திமுக தலைமை. இந்நிலையில், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜாவை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தென்காசி வடக்கு

தென்காசி வடக்கு

அதனை உறுதி செய்யும் வகையில் இன்றைய முரசொலி நாளிதழில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய நகர கழகங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தென்காசி வடக்கு மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவ நல்லூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், சங்கரன்கோவில் (3 ஊராட்சிகள் மட்டும்), மேலநீலித நல்லூர், குருவிகுளம், வாசுதேவநல்லூர் ஒன்றியங்கள் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி தெற்கு

தென்காசி தெற்கு

அதனை உறுதி செய்யும் வகையில் இன்றைய முரசொலி நாளிதழில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய நகர கழகங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தென்காசி வடக்கு மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவ நல்லூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், சங்கரன்கோவில் (3 ஊராட்சிகள் மட்டும்), மேலநீலித நல்லூர், குருவிகுளம், வாசுதேவநல்லூர் ஒன்றியங்களில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாவுக்காக மாற்றம்

ராஜாவுக்காக மாற்றம்

முன்னர், தென்காசி தெற்கு மாவட்டத்தில் இடம்பெற்றிருந்த சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏவான ராஜாவை தற்போது தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்க இருப்பதால், தென்காசி மாவட்ட திமுகவில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்காகவே சங்கரன்கோவில் தொகுதியை வடக்கிற்கு மாற்றியுள்ளனர்.

புலம்பும் சிட்டிங் மா.செ ஆதரவாளர்கள்

புலம்பும் சிட்டிங் மா.செ ஆதரவாளர்கள்

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்காக சிட்டிங் மா.செ செல்லதுரையும், எம்.பி தனுஷ் குமாரும் போட்டி போட்டுக் கொண்டிருந்த சூழலில், சங்கரன்கோவில் தொகுதியை வடக்கிற்கு மாற்றி, சங்கரன்கோவில் எம்.எல்.ஏவையே மாவட்ட செயலாளராக நியமிக்க தலைமை கணக்குப் போட்டிருப்பதைப் பார்த்து செல்லதுரை, தனுஷ் குமாரின் ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+