Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரான் போர்: வான்பரப்பை மொத்தமாக மூடிய துபாய்! விமான போக்குவரத்து உலகம் முழுவதும் ஸ்தமித்தது!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான் வழி தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதனை எதிர்த்து இஸ்ரேலும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் பரப்பை மூடியிருக்கின்றன. இதன் காரணமாக சர்வதேச அளவில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணமாக, வான்வழிப் பாதைகள் மூடப்பட்டு, ஏராளமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் உலகின் முக்கிய விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.

Dubai International Airport Grounded

அமெரிக்காவின் கோர தாக்குதல்

இந்தத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா 'ஆபரேஷன் எபிக் ஃபுயூரி' என்றும், இஸ்ரேல் 'ஆபரேஷன் லயன்ஸ் ரோவர்' என்றும் பெயரிட்டுள்ளன. இன்று அதிகாலையில் நடைபெற்ற இத்தாக்குதல்கள் ஈரான் தலைநகர் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கரஜ் உள்ளிட்ட பல ஈரானிய நகரங்கள் குறிவைக்கப்பட்டன. ஈரானின் இராணுவத் திறன்களை அழிப்பதும், அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுப்பதும் இதன் நோக்கம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

வளைகுடா நாடுகளின் நிலைமை

தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பல நாடுகளின் சிவில் வான்வெளிகள் முடங்கின. இஸ்ரேலும், ஈரானும் தங்கள் வான்வெளியை முழுவதுமாக மூடிக்கொண்டன. அண்டை நாடான ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளும் வர்த்தக விமானப் போக்குவரத்தை நிறுத்திக்கொண்டன. முன்னணி விமான நிறுவனங்கள் உடனடியாக பெருமளவிலான விமானச் சேவைகளை ரத்து செய்ததால், பயணிகள் குழப்பத்திலும் அச்சத்திலும் விமான நிலையங்களில் தவித்தனர்.

எந்த நாடுகளில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது?

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இரு நாடுகளின் வான்வெளிகளும் தாக்குதல்கள் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மூடப்பட்டதாக உறுதிப்படுத்தினர். விமான நிறுவனங்களுக்கோ அல்லது புறப்படத் தயாராக இருந்த பயணிகளுக்கோ எந்தவித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை. மத்திய கிழக்கு முழுவதும் நாடுகள் உடனடி விமானத் தடைகளை அமல்படுத்தின.

ஈரானிலிருந்து உடனே வெளியேறுங்கள்.. தங்கள் நாட்டு மக்களுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் அவசர மெசேஜ்!
ஈரானிலிருந்து உடனே வெளியேறுங்கள்.. தங்கள் நாட்டு மக்களுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் அவசர மெசேஜ்!
  • ஈரான்
  • இஸ்ரேல்
  • பஹ்ரைன்
  • தோஹா (கத்தார்)
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • ஜோர்டான்
  • கத்தார்
  • அபுதாபி
  • குவைத்

விமான நிறுவனங்கள் அறிவுறுத்தல்

ஆகியவற்றின் வான் பரப்புகள் மூடப்பட்டிருக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்வெளி மூடப்பட்டது. அபுதாபி மற்றும் தோஹா போன்ற முக்கிய வளைகுடா நகரங்கள் மீது ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது பயணங்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. வேகமாக மோசமடைந்து வரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, தூதரகங்களும் அரசு அமைப்புகளும், பயணிகளை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், பயணத் திட்டங்களை ரத்து செய்யுமாறும் அவசர அறிவுறுத்தல்களை வெளியிட்டன.

ஈரானுக்கு செல்லும் விமானங்கள் ரத்து.. உச்சக்கட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு! போர் தொடங்கப்போகிறது
ஈரானுக்கு செல்லும் விமானங்கள் ரத்து.. உச்சக்கட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு! போர் தொடங்கப்போகிறது

வேறு வழியில் திருப்பிவிடப்பட்ட விமானங்கள்

சில நிமிடங்களிலேயே உலகளாவிய விமான நிறுவனங்கள் தங்கள் வலைத்தளங்களில் சேவைகளை நிறுத்துவதையும் ரத்துசெய்வதையும் அறிவித்தன. துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) போன்ற, பிராந்தியத்தின் முக்கிய மையங்களுக்குச் செல்லும் அல்லது புறப்படும் பல விமானங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் முனையங்களில் சிக்கித் தவித்தனர். விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு வான்வெளியைத் தவிர்த்து, விமானங்களை வேறு வழியில் திருப்பிவிட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+