மத்திய கிழக்கு முழுவதும் ஒலித்த சைரன் சத்தம்.. பங்கரில் பதுங்கிய மக்கள்! மோசமடையும் நிலைமை!
துபாய்: ஈரானுக்கு அமெரிக்கா கொடுத்த கெடு இன்னும் சில மணி நேரங்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில், தற்போது மத்திய கிழக்கு முழுவதும் சைரன் சத்தம் ஒலித்திருக்கிறது.
போர் நிறுத்தம் தொடர்பாக, நான் முன் வைத்த நிபந்தனைகளை ஏற்கவில்லை எனில், ஈரானின் நாகரிகத்தையே அழிப்பேன் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

நாளை அதிகாலை 5.30 மணியுடன் டிரம்ப் கொடுத்த காலக்கெடு நிறைவடைந்திருக்கிறது. எனவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்கள் ஈரான் நோக்கி புறப்பட்டிருக்கின்றன. நாளை காலை ஈரான் பெரிய தாக்குதலை எதிர்கொள்ள இருக்கிறது. மறுபுறம் பேச்சுவார்த்தைக்கான காலக்கெடுவை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது.
இருப்பினும் இது தொடர்பான முடிவு ஈரான் தரப்பிலும், அமெரிக்கா தரப்பிலும் இன்னும் எடுக்கப்படவில்லை. இப்படி இருக்கையில், மத்திய கிழக்கு முழுவதும் சைரன் சத்தம் ஒலித்து வருகிறது.
தற்போது மத்திய கிழக்கின் நிலைமை என்ன?
பஹ்ரைனில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளன. தங்கள் நாட்டை இலக்காகக் கொண்ட ஏவுகணைத் தாக்குதலை வெற்றிகரமாக இடைமறித்ததாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களைத் தங்கள் வான் பாதுகாப்புப் படைகள் எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக", நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு குவைத் தனது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பாதுகாப்புக்காக சைரன் ஒலிக்கப்படுகிறது. சைரன் சத்தம் கேட்டால் உடனே, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என துபாய் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்? -
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம்












Click it and Unblock the Notifications