Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்னரசுவை சொந்த வார்டிலேயே வீழ்த்த உதவிய வியூகம்! ஸ்டாலினிடம் சபாஷ் வாங்கிய திமுக மாவட்டச்செயலாளர்!

தென்னரசுவை சொந்த வார்டிலேயே வீழ்த்திய திமுக மாவட்டச் செயலாளரின் களப்பணி.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை அவரது சொந்த வார்டிலேயே வீழ்த்தியதன் மூலம் அங்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்த நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் ஸ்டாலினிடம் சபாஷ் வாங்கியிருக்கிறார்.

தென்னரசுவின் சொந்த வார்டில் மொத்தம் 763 வாக்குகள் பதிவான நிலையில் பாகம் 124ல் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் 463 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளரோ வெறும் 192 ஓட்டுக்களை மட்டுமே வாங்கியிருந்தார்.

ராஜேஷ்குமார் எம்.பி. தலைமையிலான டீம் காலை மாலை என இரண்டு வேளைகள் மட்டுமல்லாமல் பகல் நேரங்களில் செய்த தீவிர பிரச்சாரமும் வியூகமும் ஒர்க் அவுட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அமைச்சர்கள் , 19 மாவட்டச் செயலாளர்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை களமிறக்கி இருந்தது திமுக தலைமை. ஈரோட்டில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு தேர்தல் பணியாற்றிய அவர்கள் ஒவ்வொருவருக்கும் அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் கே.என்.நேருவால் ஒவ்வொரு பகுதிகள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்தன. அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் மட்டும் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் தேர்தல் பணியாற்றினால் போதும் என்ற நிலை இருந்தது.

நாமக்கல் கிழக்கு மாவட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்டம்

அந்த வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் எம்.பி.க்கு அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் சொந்த வார்டு ஒதுக்கப்பட்டிருந்தது. மற்ற வார்டுகளில் எப்படியோ தென்னரசுவின் சொந்த வார்டு திமுகவுக்கு சற்று டஃப்பாகவே இருந்து வந்தது. இந்நிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை மொத்தமாக களமிறக்கிய ராஜேஷ்குமார் ஒவ்வொரு வீட்டுக்கும் நாளொன்றுக்கு மூன்று முறை நிர்வாகிகளை நேரில் அனுப்பி ஓட்டுக் கேட்க வைத்தார்.

தலைமை பாராட்டு

தலைமை பாராட்டு

இதனிடையே நம்ம வார்டுதானே நமக்கு தான் ஓட்டுப்போடுவார்கள் எனக் கருதிய தென்னரசு, பிரச்சாரத்தில் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்ததால் மொத்த வாக்குகளையும் காங்கிரஸ் வேட்பாளர் பக்கம் திருப்பிவிட்டார் ராஜேஷ்குமார். இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் இந்த விவகாரம் பெரியளவில் தொலைக்காட்சிகளில் பிளாஷ் ஆனதால் தென்னரசுவின் சொந்த வார்டில் தேர்தல் பணியாற்றிய திமுக நிர்வாகிகளுக்கு தலைமையிடம் இருந்து பாராட்டு வந்திருக்கிறது.

எந்தெந்த வார்டு

எந்தெந்த வார்டு

ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்தெந்த பூத்களில் காங்கிரஸை விட அதிமுக அதிக வாக்குகள் பெற்றிருந்தது என்ற விவரத்தை அண்ணா அறிவாலயத்துக்கு அனுப்பும் பணியில் அமைச்சர் முத்துசாமி ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+