இது மட்டும் மாறலயே.. விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் தடுப்புகளை தாண்டிக் குதிக்கும் தவெக தொண்டர்கள்!
ஈரோடு: ஈரோட்டில் இன்று நடைபெறும் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் தொண்டர்கள் நிற்க ஒவ்வொரு பிரிவாக தடுக்கப்பட்டுள்ளதால் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு செல்ல சில தவெக தொண்டர்கள் அத்துமிறி தடுப்புகளை தாண்டி குதித்து வருகின்றனர்.
கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு, முதன்முறையாக புதுச்சேரியில் கடந்த வாரம் பொதுவெளியில் மக்கள் சந்திப்பு பரப்புரையை தொடங்கினார் தவெக தலைவர் விஜய். இதன் தொடர்ச்சியாக, இன்று (டிசம்பர் 18) ஈரோட்டில் திறந்தவெளியில் விஜய் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள சரளை என்ற பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் அவருடைய ஏற்பாட்டில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கூட்டத்தின் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க, விஜய் பிரச்சாரம் செய்யக்கூடிய இடத்தில் 72 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுகளிலும் 400 நபர்கள் நின்று விஜய் பிரச்சார வாகனத்திலிருந்து பேசுவதை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பொதுகூட்ட மேடையை சுற்றியும் தவெக கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. மைதானத்தில் விஜய்யின் பரப்புரை வாகனத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே 50 மீட்டர் இடைவெளியுடன், 4 தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விஜய் பரப்புரைக்காக 1797 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் பிரச்சாரக் கூடத்திற்காக காலை 9 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். அங்கிருந்து சென்னை விமான நிலையம் செல்லும் அவர், தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் வரை பயணித்து, பிறகு சாலை மார்க்கமாக பிரச்சாரம் நடைபெறவுள்ள மைதானத்திற்கு காரில் செல்கிறார்.
இதனிடையே, காலை முதலே பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடத்தில் தவெக தொண்டர்களும், பொதுமக்களும் குவியத் தொடங்கி விட்டனர். கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டோர் பொதுக்கூட்டத்திற்கு வரவேண்டாம் என அக்கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தவெக பரப்புரை கூட்டத்தில் தடுப்புகளை தாண்டி குதித்து வருகின்றனர் தவெக தொண்டர்கள். ஒவ்வொரு பிரிவாக தடுக்கப்பட்டுள்ளதால் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு செல்ல சில தவெக தொண்டர்கள் அத்துமிறி தடுப்புகளை தாண்டி குதித்து வருகின்றனர்.
விஜய் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் ரசிகர்கள் அத்துமீறி தடுப்புகளை தாண்டுவதும், கம்பங்கள், மரங்களில் ஏறுவதும் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. தவெக தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என தவெக தலைமையும் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
தவெக பெண் தொண்டர்கள் மீது மதுபாட்டில் வீச்சு.. ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் அதிர்ச்சி! -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன்











Click it and Unblock the Notifications