கிச்சனில் சமைத்து கொண்டிருந்த பெண்.. உள்ளே சென்ற மாமனார்.. அரிவாளால் ஒரே போடு.. அலறிய திருப்பத்தூர்
மருமகளை மாமனார் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்
திருப்பத்தூர்: மருமகளை கழுத்து அறுத்து கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இதுகுறித்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை கிளப்பிவிட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ளது ஜங்களாபுரம்.. இங்கு வசித்து வருபவர் மணி... இவரது மகன் சிவா.. 40 வயதாகிறது..
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்... இவரது மனைவி பெயர் முருகம்மாள்.. 36 வயதாகிறது.. இவர் ஒரு டீச்சர்.. கலர்பதி பகுதியில் அரசு துவக்கப் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.

2 பிள்ளைகள்
இந்த தம்பதிக்கு மதுனிஷா என்ற 11 வயதில் ஒரு மகளும், ரோகித் என்று 8 வயதில் மகனும் இருக்கிறார்கள்.. எனினும் தம்பதி இருவருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன.. இதனால் 3 வருடத்துக்கு முன்பு விவாகரத்து கேட்டு கோர்ட்டில்கூட கேஸ் போட்டுள்ளனர்.. அதனால் 3 வருடமாகவே கணவனை பிரிந்துவிட்டார்.. இப்போதைக்கு தன்னுடைய அப்பா வீட்டில் தங்கியுள்ளார் முருகம்மாள்.

ஆத்திரம்
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் வீட்டிற்கு வந்துள்ளார் முருகம்மாள்.. அப்போது வீட்டில் மாமனார் மணி இருந்துள்ளார்.. அவரிடம், இந்த வீடு தனக்கு சொந்தம் என்றும், வீட்டைவிட்டு வெளியேறுமாறு சொன்னதாகவும் தெரிகிறது.. இதுவே மருமகள் - மாமனார் இடையே தகராறாகவும் உருவெடுத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார், முருகம்மாள் கிச்சனில் இருக்கும் பொழுது, கத்தியால் மருமகளின் கழுத்தை வெட்டிவிட்டார்..

சரண்
இதனால் நிலைகுலைந்த முருகம்மாள் ரத்த வெள்ளத்தில் கிச்சனிலேயே விழுந்து இறந்துவிட்டார்.. முருகம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.. ஆனால், அதற்குள் மானார் மணி நாட்றம்பள்ளி போலீசாரிடம் மருமகளை வெட்டி கொலை செய்ததாக சொல்லி சரணடைந்துள்ளார்...

கைது
இப்போது மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.. முருகம்மாள் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்... மருமகளை மாமனார் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications