For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிச்சனில் சமைத்து கொண்டிருந்த பெண்.. உள்ளே சென்ற மாமனார்.. அரிவாளால் ஒரே போடு.. அலறிய திருப்பத்தூர்

மருமகளை மாமனார் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்

Google Oneindia Tamil News

திருப்பத்தூர்: மருமகளை கழுத்து அறுத்து கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இதுகுறித்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை கிளப்பிவிட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ளது ஜங்களாபுரம்.. இங்கு வசித்து வருபவர் மணி... இவரது மகன் சிவா.. 40 வயதாகிறது..

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்... இவரது மனைவி பெயர் முருகம்மாள்.. 36 வயதாகிறது.. இவர் ஒரு டீச்சர்.. கலர்பதி பகுதியில் அரசு துவக்கப் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.

உ.பி. தேர்தல் முடிவுகள் கணிப்புகளை தவிடுபொடியாக்கும்: சொல்வது சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உ.பி. தேர்தல் முடிவுகள் கணிப்புகளை தவிடுபொடியாக்கும்: சொல்வது சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்

 2 பிள்ளைகள்

2 பிள்ளைகள்

இந்த தம்பதிக்கு மதுனிஷா என்ற 11 வயதில் ஒரு மகளும், ரோகித் என்று 8 வயதில் மகனும் இருக்கிறார்கள்.. எனினும் தம்பதி இருவருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன.. இதனால் 3 வருடத்துக்கு முன்பு விவாகரத்து கேட்டு கோர்ட்டில்கூட கேஸ் போட்டுள்ளனர்.. அதனால் 3 வருடமாகவே கணவனை பிரிந்துவிட்டார்.. இப்போதைக்கு தன்னுடைய அப்பா வீட்டில் தங்கியுள்ளார் முருகம்மாள்.

ஆத்திரம்

ஆத்திரம்

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் வீட்டிற்கு வந்துள்ளார் முருகம்மாள்.. அப்போது வீட்டில் மாமனார் மணி இருந்துள்ளார்.. அவரிடம், இந்த வீடு தனக்கு சொந்தம் என்றும், வீட்டைவிட்டு வெளியேறுமாறு சொன்னதாகவும் தெரிகிறது.. இதுவே மருமகள் - மாமனார் இடையே தகராறாகவும் உருவெடுத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார், முருகம்மாள் கிச்சனில் இருக்கும் பொழுது, கத்தியால் மருமகளின் கழுத்தை வெட்டிவிட்டார்..

சரண்

சரண்

இதனால் நிலைகுலைந்த முருகம்மாள் ரத்த வெள்ளத்தில் கிச்சனிலேயே விழுந்து இறந்துவிட்டார்.. முருகம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.. ஆனால், அதற்குள் மானார் மணி நாட்றம்பள்ளி போலீசாரிடம் மருமகளை வெட்டி கொலை செய்ததாக சொல்லி சரணடைந்துள்ளார்...

 கைது

கைது

இப்போது மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.. முருகம்மாள் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்... மருமகளை மாமனார் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Father in law killed daughter in law due to family issue near Tirupattur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X