கர்நாடகாவில் கன மழை.. தென் பெண்ணையாற்றில் நீர் வரத்து அதிகரிப்பு: உற்று பார்த்தால் ஒரே நுரை.. கொடுமை
ஒசூர்: கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் தென் பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Recommended Video
அதேநேரம், நுரைகளுடன் வரும் தொழிற்சாலை ரசாயன கழிவுகளால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தென் பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று தென் பெண்ணை ஆற்றின் வழியாக ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 707 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணை நீர்
கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், தற்போது அணையில் 41.83 அடி நீர் இருப்பு உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 640 கனஅடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ரசாயன நுரை
கனமழையால் தென்பெண்ணையாற்றில் வரும் அதிகப்படியான நீரில் கர்நாடகா மாநிலத்தில் ஆற்றங்கரை ஓரமாக உள்ள தொழிற்சாலைகள் தேக்கி வைத்துள்ள ரசாயன கழிவுகள் தொடர்ந்து ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த ரசாயன கழிவு நுரைகள் ஒசூர் கெலவரப்பள்ளி அணைப்பகுதிகளில் குவியல் குவியலாக குவிந்து காணப்படுகின்றன.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்
மத்திய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைப்படி கடந்த ஆண்டு தமிழக கர்நாடகா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தென்பெண்ணை ஆற்றில் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர். இந்த நிலையில் எந்த ஆய்வு முடிகளும் வெளியிடப்படாத நிலையில் தொடர்ந்து ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருவது கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மறுப்பு
அதேநேரம் கர்நாடக தரப்பு தாங்கள் தண்ணீரை புனிதமாக கருதுபவர்கள் என்றும், எனவே அதில் கழிவுநீரை கலக்கவில்லை என்றும் தமிழக பகுதிகளில் தான் கழிவு நீர் கலக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறது.

ஆய்வு முடிவு தேவை
ஆய்வு முடிவுகள் வெளியே வந்தால் அது எந்த மாதிரி கழிவு என்பது தெரியவரும். இதன் மூலமாக அது எங்கே கலக்கிறது என்பதை கண்டறிய முடியும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால், ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கே உள்ளது
கெலவரப்பள்ளி அணைக்கட்டு பூங்கா ஒசூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணைக்கட்டு 1995 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் எல்லை பகுதி மிகவும் அருகாமையில் 8 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த சுற்றுலாத்தலம் ஒசூர் மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு தலமாக உள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்து மக்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications