கர்நாடகாவில் கன மழை.. தென் பெண்ணையாற்றில் நீர் வரத்து அதிகரிப்பு: உற்று பார்த்தால் ஒரே நுரை.. கொடுமை
ஒசூர்: கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் தென் பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Recommended Video
அதேநேரம், நுரைகளுடன் வரும் தொழிற்சாலை ரசாயன கழிவுகளால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தென் பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று தென் பெண்ணை ஆற்றின் வழியாக ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 707 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணை நீர்
கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், தற்போது அணையில் 41.83 அடி நீர் இருப்பு உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 640 கனஅடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ரசாயன நுரை
கனமழையால் தென்பெண்ணையாற்றில் வரும் அதிகப்படியான நீரில் கர்நாடகா மாநிலத்தில் ஆற்றங்கரை ஓரமாக உள்ள தொழிற்சாலைகள் தேக்கி வைத்துள்ள ரசாயன கழிவுகள் தொடர்ந்து ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த ரசாயன கழிவு நுரைகள் ஒசூர் கெலவரப்பள்ளி அணைப்பகுதிகளில் குவியல் குவியலாக குவிந்து காணப்படுகின்றன.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்
மத்திய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைப்படி கடந்த ஆண்டு தமிழக கர்நாடகா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தென்பெண்ணை ஆற்றில் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர். இந்த நிலையில் எந்த ஆய்வு முடிகளும் வெளியிடப்படாத நிலையில் தொடர்ந்து ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருவது கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மறுப்பு
அதேநேரம் கர்நாடக தரப்பு தாங்கள் தண்ணீரை புனிதமாக கருதுபவர்கள் என்றும், எனவே அதில் கழிவுநீரை கலக்கவில்லை என்றும் தமிழக பகுதிகளில் தான் கழிவு நீர் கலக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறது.

ஆய்வு முடிவு தேவை
ஆய்வு முடிவுகள் வெளியே வந்தால் அது எந்த மாதிரி கழிவு என்பது தெரியவரும். இதன் மூலமாக அது எங்கே கலக்கிறது என்பதை கண்டறிய முடியும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால், ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கே உள்ளது
கெலவரப்பள்ளி அணைக்கட்டு பூங்கா ஒசூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணைக்கட்டு 1995 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் எல்லை பகுதி மிகவும் அருகாமையில் 8 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த சுற்றுலாத்தலம் ஒசூர் மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு தலமாக உள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்து மக்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications