Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000.. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாக்களை பயன்படுத்தி, தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நல்ல பலன் கிடைப்பதால், தொற்றிலிருந்து மீள்பவர்கள் பிளாஸ்மா தானம் செய்யவும் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Andhra Pradesh: Plasma donars will get Rs 5,000, says Chief Minister YS Jagan Mohan Reddy

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த பணத்தை பயன்படுத்தி, அவர்கள் சத்துமிக்க உணவுகளை வாங்கிக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த 3 நாட்களாக தினமும் 10,000த்திற்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்கு இதுவரை 1,40,933 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அம்மாநிலத்தில் 1,349 பேர் பலியாகி உள்ளனர்.

Recommended Video

    Jagan Mohan Launched 52 New Mobile COVID-19 Testing Buses

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+