ஆக்சிஜன் இல்லை.. கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்து.. 45 நிமிஷம் துடிதுடித்து.. தெலுங்கானா ஷாக்!
ஹைதராபாத்: ஒரு தாத்தா ஆஸ்பத்திரி கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார்.. அதனால் அவருக்கு ஆக்ஸிஜன் தடைபட்டு போனதுடன், கிட்டத்தட்ட 45 நிமிஷம் துடித்து துடித்து உயிர் பிரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா கொடுக்கும் வலியைவிட, சுற்றியிருப்பவர்களும், உறவுகளும் கொடுக்கும் வலி அதிகமாகவே உள்ளது.. தொற்று ஏற்பட்டு இறந்தால், அந்த சடலத்தை தொட்டு அழக்கூட முடியாத சூழலில் நாம் உள்ளோம் என்பது தெரிந்தும், மனித நேயம் மலிந்து வருகிறது.

தெலுங்கானாவில் ஒரு கொடூரம் நடந்துள்ளது.. இதை கேட்டாலே மனசெல்லாம் பதறி போய்விடுகிறது.. கரீம்நகர் அரசு ஆஸ்பத்திரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இங்கு ஒரு முதியவர் தொற்று பாதித்து அனுமதிக்கப்பட்டிருந்தார்.. ஆக்ஸிஜன் வைத்துதான் அவருக்கு சிகிச்சை தரப்பட்டு வந்தது.. இந்நிலையில், சுயநினைவின்றி, திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.. அப்படி விழுந்ததும் அவருக்கு ஆக்ஸிஜன் வந்து கொண்டிருந்தது தடைபட்டுவிட்டது.. அதனால் கீழே விழுந்த கொஞ்ச நேரத்திலேயே ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்தும் விட்டார்.
இதில் கொடுமை என்னவென்றால், கட்டிலில் இருந்து இவர் கீழே விழுந்த செய்தி அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியருக்கு சொல்லப்பட்டுள்ளது.. அது தெரிந்தும் அந்த ஊழியர் அலட்சியப்படுத்தி உள்ளார்.. ஆக்ஸிஜன் கிடைக்காமல் 45 நிமிஷம் அந்த தாத்தா துடிதுடித்து உள்ளார்.. அவர் அப்படி உயிருக்கு போராடுவதை பார்த்த, அதே வார்டில் இருந்த இன்னொரு நோயாளி, அந்த ஊழியருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி உள்ளார்.. அப்போதுகூட ஊழியர்கள் வர காணோம்.
இதனால் தகவல் தெரிவித்த நபர், இதை உடனே போட்டோக்களாக எடுத்து, வெளியில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைத்தார்.. அப்போதும் யாரும் வரவில்லை.. 45 நிமிடம் துடித்தபடியே அந்த தாத்தா உயிர் பிரிந்துள்ளது.. இதற்கு முழுக்க முழுக்க ஆஸ்பத்திரி நிர்வாகம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
ஆனால், நோயாளி கீழே விழுந்து இறந்த பிறகு, ஒரு ஊழியர் ஓடிவந்து இறந்த உடலை கட்டில் மேலே ஏற்றி படுக்க வைத்து, ஆக்ஸிஜனும் வைத்ததாக சொல்கிறார்கள்.. எனினும், ஒரு நோயாளி கண்ணெதிரே இறந்துபோனதை பார்த்து அந்த வார்டில் உள்ள மற்றவர்கள் கொதிப்பிலும், கலக்கத்திலும் உள்ளனர்... இது சம்பந்தமான போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications