ஞானவாபி மசூதி வழக்கு: வாரணாசி கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்க.. ஓவைசி ட்விட்!
ஹைதராபாத்: பாபர் மசூதி வழக்கு சென்ற அதே பாதையில் தான் ஞானவாபி மசூதி வழக்கும் செல்லும் என்றும் வாரணாசி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பிரபலமான காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி மசூதி உள்ளது.
வாரணாசியில் உள்ள இந்துக் கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் இங்கு மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆய்வு நடத்த உத்தரவு
இந்த மசூதியின் வெளிப்புற சுவற்றில் இருக்கும் இந்துக் கடவுளான சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று இந்துப்பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி அளிக்கப்பட்டு வருவதால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சிவில் நீதிமன்றம், மசூதிக்குள் ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
இந்த ஆய்வில் மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி கோர்ட்டு உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றமே மனு இவ்விவகாரம் குறித்து முடிவு எடுக்க உத்தரவிட்டது.

விசாரணைக்கு உகந்தது அல்ல
இதையடுத்து, ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று மசூதியின் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், வழிபாடு நடத்த கோரிய இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என உத்தரவிட்டது. மேலும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் இந்த மனுவின் மீது விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஓவைசி கருத்து
இந்த நிலையில், வாரணாசி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து ஹைதராபாத் எம்.பியும் ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, பாபர் மசூதி வழக்கு சென்ற அதே பாதையில் தான் இந்த வழக்கும் செல்லும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ''இந்த வழக்கில் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் இதில் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தேன். வாரணாசி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும். வாரணாசி நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி மேல்முறையீடு செய்யும் என்றும் நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications