Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெலுங்கானா காங். போராட்டம்-போலீஸ் சட்டையை பிடித்து அலேக்காக தூக்கிய ரேணுகா சவுத்ரி.. பரபர வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியினர் இன்று நடத்திய ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தின் போது அக்கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி, போலீஸ் ஒருவரின் சட்டசையை கொத்தாக பிடித்து கேள்வி கேட்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் 3 நாட்களாக அமலாக்கத் துறையினர் 30 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். ராகுல் காந்தியை இலக்கு வைத்து மத்திய அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

 Renuka Chowdhury holds Policeman by his shirt during Hyderabad Protest

டெல்லியில் கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பிக்கள் என பலரும் முழுவீச்சில் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் எம்.பிக்கள் பலர் குண்டு கட்டாக போலீசால் தூக்கி எறியப்பட்டனர். மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மற்றும் ஜோதிமணி எம்.பி உள்ளிட்டோர் போலீசால் தாக்கவும் செய்யப்பட்டனர். இது தொடர்பாக லோக்சபா, ராஜ்யசபா தலைவர்களிடம் காங்கிரஸ் தலைவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை நடத்தவும் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் பிரம்மாண்ட முறையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நட்ந்த ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற காங்கிரசார் திடீரென வாகனங்களுக்கு தீ வைத்தனர். அரசு பேருந்துகளில் ஏறி நின்று முழக்கம் எழுப்பினர். பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கமிட்டு கொடும்பாவியும் கொளுத்தினர்.

இத்தனை களேபரங்களுக்கு நடுவே திடீரென காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி, போலீஸ் ஒருவரது சட்டையைப் பிடித்து கொத்தாக தூக்கிக் கொண்டிருந்தார். இது ஹைதராபாத் ஆளுநர் மாளிகை முன்பாக பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு குவிந்த போலீசார், ரேணுகா சவுத்ரியின் பிடியில் இருந்து அந்த போலீசாரை விடுவித்தனர். அத்துடன் ரேணுகா சவுத்ரியை இழுத்துக் கொண்டு போலீஸ் வேனில் ஏற்றினர். தம்மிடம் அந்த போலீஸ்காரர் தவறாக நடந்து கொண்ட காரணத்தாலேயே அவரது சட்டையைப் பிடித்தேன் என விளக்கம் தந்துள்ளார் ரேணுகா சவுத்ரி. சமூக வலைதளங்களில் ரேணுகா சவுத்ரி, போலீஸ்காரரது சட்டையை பிடித்து வாக்குவாதம் செய்யும் வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+