கத்தாருக்குப் போய் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 1000 .. 4 ஆண்டுகளில்
டெல்லி: கத்தார் நாட்டுக்கு வேலைக்குப் போன இடத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 1000 இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
2022ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை கத்தார் நடத்தவுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
அதிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஏன் இந்த மரணங்கள்
கத்தார் அரசும் சரி, அந்த நாட்டு நிறுவனங்களும் சரி ஊழியர்ளுக்கான பாதுகாப்பையும், அவர்களின் நலனிலும் உரிய அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால், இயல்பானவை என்கிறது இந்தியத் தூதரகம்
ஆனால் இந்தியத் தூதரகமோ அப்படியெல்லாம் இல்லை. இவை அனைத்துமே இயல்பானவைதான், எந்தவிதமான அலட்சியத்தாலோ அல்லது கவனக்குறைவாலோ இந்த மரணங்கள் சம்பவிக்கவில்லை என்று கூறுகிறது.

இந்தியர்கள்தான் பெரும்பான்மை
கத்தாரில் உள்ள பல்வேறு இன க் குழுக்களில் இந்தியத் தொழிலாளர்கள்தான் மெஜாரிட்டியானவர்கள். 2012ம் ஆண்டு நிலவரப்படி இங்கு கிட்டத்தட்ட 5 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் உள்ளனர்.

26 சதவீதம் பேர்
கத்தார் மக்கள் தொகையில் இது 26 சதவீதம் ஆகும். பெரும்பாலான இந்தியர்கள் இங்கு சாதாரண வேலைகளில்தான் ஈடுட்டுள்ளனர். இவர்களுக்கு மிகவும் குறைந்த அளவிலான ஊதியமே வழங்கப்படுகிறது.

இந்தியர்கள்தான் அதிக அளவில் இறக்கிறார்கள்
மேலும் இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில்தான் இறப்பு விகிதமும் அதிகமாக இருக்கிறதாம். ஆனால் இதை இந்தியத் தூதரகம் மறைப்பது போல செயல்படுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.

கத்தாரைப் பாராட்டிப் புகழும் இந்தியத் தூதரகம்
இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில் இறப்பு விகிதம் அதிகம் இருந்தும் கூட, இந்தியத் தொழிலாளர்கள் நலனில் கத்தார் அரசு மிகுந்த அக்கறை காட்டுவதாக புகழ்ந்து தள்ளிப் பேசுகிறது இந்தியத் தூதரகம்.

விலங்குகளைப் போல நடத்தும் கத்தார் ஆம்னெஸ்டி சாடல்
ஆனால்ஆம்னெஸ்ட் இன்டர்நேஷனல் அமைப்போ, கத்தாரில் பிற நாட்டுத் தொழிலாளர்களை விலங்குகள் போல நடத்துவதாக கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அது சாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications