ஆந்திராவில் புஷ்கரம் திருவிழாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 27 பேர் பலி, பலர் காயம்
ராஜமுந்திரி: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இன்று துவங்கிய புஷ்கரம் திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 27 பேர் பலியாகியுள்ளனர், 60 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள புஷ்காருலு காட் பகுதியில் புஷ்கரம் திருவிழா இன்று அதிகாலை துவங்கி நடைபெற்று வருகிறது. புஷ்கரம் என்பது கும்பமேளா போன்றது. 12 ஆண்டுக்கு ஒரு முறை கோதாவரி ஆற்றுப் பகுதியில் நடக்கும் திருவிழா இது. இந்நிலையில் இன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரியில் பக்தர்கள் கோதாவரி ஆற்றில் புனித நீராடச் சென்றனர்.

அப்போது ஒரு வாயிலில் ஏராளமான பக்தர்கள் முந்தியடித்துச் சென்றதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 27 பேர் பலியாகினர், 60 பேர் காயம் அடைந்தனர்.
இன்று அதிகாலை ராஜமுந்திரியில் தனது மனைவி, மகனுடன் புனித நீராடிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடந்த சம்பவம் கேட்டு மீண்டும் அங்கு விரைந்துள்ளார். மேலும் அங்கு மீட்பு பணியை துவங்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கூட்டநெரிசலில் பலியானவர்களின் உடல்கள் ராஜமுந்திரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் அடைந்தவர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இன்று முதல் வரும் 25ம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் திருவிழாவின்போது 4 கோடி பக்தர்கள் கோதாவரியில் புனித நீராடுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. புஷ்கரம் திருவிழா 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். இந்த திருவிழா கோதாவரி ஆறு பாயும் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிராவில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு குருபகவான் சிம்மராசியில் பிரவேசித்து கோதாவரியில் பயணிப்பதால் இது மகா கோதாவரி புஷ்கரம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கோதாவரி புஷ்கரம் விழா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவுக்கு மத்திய அரசு ரூ.100 கோடியும், ஆந்திர அரசு ரூ.1, 650 கோடியும், மகாராஷ்டிரா மாநில அரசு ரூ.10 கோடியும் நிதி ஒதுக்கியுள்ளது.

பக்தர்கள் புனித நீராட கோதாவரி ஆற்றில் 279 குளிக்கும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராஜமுந்திரியில் மட்டும் பக்தர்கள் குளிக்க 17 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புஷ்கரம் விழாவையொட்டி தெலுங்கானாவில் ஆதிலாபாத், நிஜாமாபாத், வாரங்கல், கரீம் நகர், கம்மம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோதாவரியில் புனித நீராடினர்.
பக்தர்கள் பரிகார பூஜை செய்ய ஏதுவதாக அரசு சார்பில் பூசாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு












Click it and Unblock the Notifications