பெற்றோரின் செல்போன்களை ஹேக் செய்து ஆபாச படங்களை பதிவிட்ட சிறுவன்.. காரணத்தை கேட்டு ஷாக் ஆன போலீஸ்!
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு தம்பதியினர் தங்கள் செல்போன்களை யாரோ ஹேக் செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த தம்பதியரின் செல்போனை ஹேக் செய்ததே அவரது 13 வயது மகன் தான் எனத் தெரியவந்துள்ளது.
முதலில் ஹேக்கர்கள் தன்னை மிரட்டி இப்படி செய்யச் சொன்னதாக கூறிய அந்தச் சிறுவன் பிறகு தானே, பெற்றோரை பிராங்க் செய்வதற்காக இப்படிச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான்.

தம்பதி புகார்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தம்பதியினர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் தங்கள் செல்போன்களை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும், செல்போன் திரையில் விசித்திரமான அனிமேஷன்கள் தோன்றுவதாகவும் வீட்டில் ப்ளூடூத் போன்ற சாதனங்களை வைத்திருப்பதாகவும் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பெற்றோருக்கும், போலீசாருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

13 வயது சிறுவன்
சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் அனைத்து சம்பவங்களுக்கும் அவர்களது மகன் தான் காரணம் எனக் கண்டறியப்பட்டது. ஆரம்ப கட்ட விசாரணையில் இதை ஒரு ஹேக்கர் சொல்லிச் செய்ததாகவும், இல்லாவிட்டால் பெற்றோரை கொன்றுவிடுவதாக அந்த ஹேக்கர் மிரட்டியதாகவும் அந்தச் சிறுவன் கூறியுள்ளான்.

பிராங்க்
அந்தச் சிறுவனிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியபோது பெற்றோரை பிராங்க் செய்வதற்காக, இப்படிச் செய்தது தெரியவந்தது. அந்தச் சிறுவன் தனது மாமாவின் செல்போனில் இருந்தே இந்தச் செயலில் ஈடுபட்டதும், இதற்கு அவனது மாமாவும் உடந்தையாக இருந்துள்ளதும் தெரியவந்தது.

ஹேக்கிங்
ஆன்லைன் கேமிற்கு அடிமையான அந்த 13 வயது சிறுவன், தனது மாமாவுக்கு சொந்தமான ஸ்மார்ட்போனில் இருந்து ஆபாச படங்களை அவரது பெற்றோரின் சமூக வலைதள கணக்குகளில் வெளியிட்டுள்ளான். மேலும், தனது பெற்றோரின் மொபைல் போன்களில் இருந்த அனைத்து தகவல்களையும் அழித்துள்ளான் என ஜெய்ப்பூர் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications