ஆந்திரா, தெலுங்கானாவில் கொளுத்தும் வெயில்... சித்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் பலி
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் வெயிலின் கொடுமைக்கு 4 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி விட்டது. இதே நிலை நீடித்தால் ஏப்ரல், மே மாதங்களில் அதாவது அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் 110 டிகிரியை எட்டி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தை விட ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலின் தாக்கம் இன்னும் உக்கிரமாக உள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது.
தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் அதிகபட்ச வெயில் காரணமாக அனல் காற்று வீசுகிறது. இந்த அனல் காற்றில் பாதிக்கப்பட்டு தெலுங்கானாவில் மட்டும் இதுவரை 7க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் இருவர் பள்ளி மாணவர்கள் ஆவர்.
இதேபோல், ஆந்திர மாநிலத்திலும் இதுவரை வெயிலுக்கு 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 பேர் வெயிலின் கொடுமையால் உயிரிழந்துள்ளனர்.
கடந்தாண்டு இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலுக்கு அதிகமானவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications