இந்திய எல்லை அருகே மியான்மர் விமானப் படை சரமாரி தாக்குதல்- 2,000 பேர் அகதிகளாக மிசோரமில் தஞ்சம்!
ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவடைந்த சில நாட்களிலேயே மியான்மர் அகதிகள் 2,000 பேர் தஞ்சமடைந்திருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மிசோரம் மாநில மக்களும் மணிப்பூரின் குக்கி, மியான்மர் எல்லை அருகே வசிக்கும் மக்களும் தொப்புள் கொடி உறவுகள். மியான்மரில் ராணுவ ஆட்சி அமைந்தது முதலே இந்திய எல்லை அருகே உள்ள பகுதிகளில் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி வருகிறது மியான்மர் விமானப் படை. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் மிசோரம், மணிப்பூர் எல்லை கிராமங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

மியான்மரில் இருந்து அகதிகளாக நுழையும் பொதுமக்களுக்கு மிசோரம் அரசு அடைக்கலம் தரக் கூடாது; பயங்கரவாதிகளும் ஊடுருவுகின்றனர் என மத்திய பாஜக அரசு அனுமதி மறுத்தது. ஆனால் எங்கள் தொப்புள் கொடி உறவுகளை நாங்கள்தான் பாதுகாப்போம் என மத்திய அரசுக்கு எதிராக மிசோரம் மாநில அரசு அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது.
இந்த பின்னணியில் அண்மையில் மிசோரம் சட்டசபை தேர்தல் வன்முறைகளின்றி அமைதியாக முடிவடைந்தது. நவம்பர் 7-ந் தேதி மிசோரம் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் இந்திய எல்லை பகுதி கிராமங்களில் மியான்மர் விமானப் படையினர் திடீரென சரமாரி தாக்குதல்களை மேற்கொண்டனர். மியான்மர் ராணுவ அரசுக்கு எதிரான பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து மியான்மர் எல்லைகளில் இருந்து 2,000க்கும் அதிகமான பொதுமக்கள் மிசோரம் மாநிலத்துக்குள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த அதிகளை மிசோரம் மாநில அரசு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகளை வழங்கியிருக்கிறது. இனி வரும் நாட்களிலும் மியான்மர் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிற அச்சம் உருவாகி உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications