ஜம்மு ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்... 2 வீரர்கள் பலி!
ஜம்மு காஷ்மீரின் சஞ்வான் பகுதியில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரின் சஞ்வான் பகுதியில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்முவின் புறநகர் பகுதியான சஞ்வான் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவுடன் கூடிய மிகப்பெரிய ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமிற்குள் வீரர்களுக்கான தங்கும் இடம் பள்ளிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இன்று அதிகாலை 4.45 மணியளவில் ராணுவ மையத்திற்குள் தீவிரவாதிகள் சுற்றித்திரிவதை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் கண்டனர். திடீரென வீரர்களின் குடியிருப்பை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள், குழந்தைகள் உள்பட 6 பேர் தாக்குதலில் காயமடைந்துள்ளனர். இந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுட்டவர்கள் ஜெய்ஷ்-ஈ-முகமது தீவிரவாத அமைப்பு என்று தெரியவந்துள்ளது. தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் இன்று ரணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்திய விமானப்படையினர் உஷார்படுத்தப்பட்டு எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். உதம்பூரில் இருந்து ஜம்முவிற்கு விரைந்து வந்த பாரா கமாண்டோக்கள் தீவிரவாதிகளை வீழ்த்தும் பணியில் ஈடுபட்டனர். தாக்குதல் நடந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் டிஜிபி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சஞ்வான் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications